/* */

'முழு நிலவு' - ஐஸ்வர்யா ராய்… பார்த்திபன் பரவச ட்வீட்..!

'பொன்னியின்செல்வன்' படப்பிடிப்பின்போது ஐஸ்வர்யா ராயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

HIGHLIGHTS

முழு நிலவு - ஐஸ்வர்யா ராய்… பார்த்திபன் பரவச ட்வீட்..!
X

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்'. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு விருந்தாக படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில், படப்பிடிப்பு தளத்தில், தான் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் நடிகர் பார்த்திபன், 'ஐஸ் வாரியம்! கற்றுக்கொள்ள… காற்று கொள்ளும் மூங்கில் துளைகளில் இருந்து இசை வரும் என கோடியாய்க் கொட்டிக் கிடக்கின்றது இப்பூமியில்.

அப்படி இப்பெண்ணிடமிருந்து… தாயான பிறகும், தான் விரும்பும் கலையைத் தொடர, ஆரோக்கியத்தை + அழகைக்காத்திட கடும் முயற்சியும் விடா பயிற்சியும் செய்கிறார்.

அழகென நான் காண்பது, பிறைநிலவு வானில் இருந்து மறையுமுன்னே முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர், வசனங்களை(இடை வரும் புன்னகை உட்பட) மனப்பாடம் செய்து ஒன் மோர் கேட்கா ஈகோவுடன் தயாராகிவிட்டு, பின் அனைவரிடமும்(selfie) அன்பொழுகப் பழகுகிறார்" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Updated On: 26 Sep 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு