/* */

Ethirneechal சிக்கலில் மாட்டிய ஜனனி! அருண்-ஆதிரை திருமணம் நடக்குமா?

ஆதிரை - கரிகாலன் திருமணத்துக்கு ஒத்துழைப்பதாக திட்டமிட்டு நடித்துக் கொண்டிருக்கும் ஜனனி, ஆதிரைக்கு ஷாக் அளிக்கும் வகையில் ஒரு பெரிய ப்ளானுடன் களமிறங்கிறார் குணசேகரன்.

HIGHLIGHTS

Ethirneechal சிக்கலில் மாட்டிய ஜனனி! அருண்-ஆதிரை திருமணம் நடக்குமா?
X

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 25th May 2023

அருண் இருக்கும் இடம் தெரிந்து கரிகாலனும் கதிரும் வேக வேகமாக அங்குள்ள தங்கும் விடுதிகளுக்கு சென்று தேட ஆரம்பிக்கிறார்கள். காரிலிருந்து வெளியே வந்த கதிர் அவர்கள் பின்னாடியே போகிறான். ஜனனி, நந்தினி, ஆதிரை மூவரும் பதைபதைப்புடன் கையைப் பிசைந்து கொண்டு நிற்க ஜான்சி ராணி அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு நையப்புடைக்கிறார். உங்கள் மேல்தான் சந்தேகம் இருக்கு. நீங்க பாத்த வேலையாதான் இருக்கும் என்று பேசுகிறாள்.

கரிகாலனின் அப்பாவும் அங்கு இல்லை முதல் சம்சாரம் கூப்பிட்டாருன்னு ஓடிட்டான் என திட்டுகிறாள் ஜான்சிராணி. அடுத்து கதிரும், கரிகாலனும் அருண் தங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டார்கள். ஆனால் அவர்கள் இல்லை. சரியான நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் கடுப்பான கதிர், சக்தியைத் திட்டிவிட்டு செல்கிறான். இருந்தாலும் கதிர் விடுவதாக இல்லை ஒவ்வொரு இடமாக தேடித் தேடிச் சென்று கொண்டிருக்கிறான். கூடவே கரிகாலனும் ஓடுகிறான்.

வெளியே வந்த சக்தியை ஜான்சி ராணி மிரட்டுகிறாள் ஆனால் அவனோ ஜான்சி ராணியை அலட்சியப்படுத்துகிறான். கௌதமுக்கு கால் செய்து பார்த்து நாட் ரீச்சபிளாக இருப்பதை ஜனனியிடம் கூறிவிட்டு செல்கிறான் சக்தி. அருகில் எங்கேயாவது இருக்கிறார்களா என்று பார்க்கிறேன் என்று போகிறார்கள். அந்த நேரத்தில் அரசு, கதிர் இருக்கும் இடத்துக்கு வந்து சேர்கிறான். அடியாட்களுடன் சேர்ந்து கதிருடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாக்குவாதம் அடிதடி சண்டையாக மாறுகிறது. கரிகாலனின் கையை உடைத்து விடுகிறார்கள். இதனால் கதிர் கரிகாலனை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான்.

அரசு வந்து கையை உடைத்துவிட்டு போயிட்டார்னு சொன்னதும் இவர்களுக்கு பயம் இன்னும் அதிகமாகிறது. அருணை அரசுவும் தேடுகிறார் என்பதைத் தெரிந்து வருத்தத்தில் இருக்கிறார் ஆதிரை. அரசு கரிகாலனின் கையை மட்டும் உடைத்திருக்கக் கூடாது அவங்க ரெண்டு பேரையும் முடிச்சிருக்கணும்னு பேசுகிறார். அந்த நேரத்தில் சாருபாலா அரசுவுக்கு அழைக்கிறார். நடந்ததைக் கூறிவிட்டு அருணை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். எப்படியும் குணசேகரன் தங்கச்சிய அருணுக்கு கட்டி வைக்க விடமாட்டேன் அண்ணி என்று கூறி அழைப்பைத் துண்டிக்கிறான்.

குணசேகரன் வீட்டு பால்கனியில் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டே இருக்கிறான். அந்த சமயம் ஞானம் கதவைத் திறந்து உள்ளே வருகிறான். ஞானத்தைப் பார்த்ததும் குணசேகரன் மேலே வா என்று கூறுகிறான். உள்ளே வந்திருக்கும் உறவினர்களை நலம் விசாரித்துக் கொண்டு மேலே செல்கிறான் ஞானம். அங்கே குணசேகரனை நேருக்கு நேர் பார்த்து பேச கொஞ்சம் தயக்கத்துடன் நிற்கும் ஞானத்தை மீண்டும் குணசேகரன் அழைத்ததால் அவன் முன் போய் நிற்கிறான்.

கல்யாண வேலைகளில் நான் மண்டையைப் பிய்ச்சிக்கிட்டு இருக்கேன். உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியலப்பா. உன் பொண்டாட்டி என்ன நடு வீட்டுல வச்சி நாக்க புடுங்கிட்டு சாகுறமாதிரி பேசிப்புட்டா. ஞானம் நம்மள பிரிக்குறாங்க. இங்கு நம்மள பெத்த அம்மா உட்பட எல்லா பொம்பளைங்களும் சேர்ந்து என்னய கீழ தள்ள பாத்துட்டுருக்காங்க. இங்கு பிரிச்சி ஆளுற சூழ்ச்சி நடந்துட்டு இருக்கு. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா என்று பல பிட்டுகளை எடுத்துபோடுகிறான்.

ஞானம் பிடி கொடுக்காமல் பேசுகிறான். தன்னைப் பற்றி குணசேகரன் ஏற்கனவே சொன்ன பல விசயங்களைக் கூறி எனக்கும் இந்த கல்யாணத்துக்கும் என்ன இருக்கு. நான் என்ன செய்ய. எனக்கு எந்த வேலையும் பிரிச்சிக் கொடுக்கல. நா என்ன பண்றது என்று கூற தன்னுடன் கடைசி வரை இருப்பதாக கூறி சத்தியம் செய்து தரவேண்டும் என ஞானத்திடம் குணசேகரன் சத்தியம் கேட்கிறார்.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 24th May 2023

வீட்டிலுள்ள ரேணுகா, ஈஸ்வரி, அம்மா விசாலாட்சி மற்ற உறவினர்களை எல்லாம் அழைத்து முன் வீட்டில் குணசேகரன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஞானத்தைக் காணோம் என்று கேட்கிறார் குணசேகரன். இதனால் அங்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. கோபத்தில் ரேணுகா நீங்க உங்க தம்பிய மனுசனா மதிக்க மாட்டீங்க. உங்க தம்பி குடிகாரப் பய என் வீட்டுக்காரர அடிச்சிருக்கான் அத கேக்கமாட்டீங்க. கதிர பாத்தா நலம் விசாரிக்குறது. எம்புருசன் வந்தா பேசாம போயி தூங்கிடுறீங்க என்று கோபத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்.

குணசேகரனும் இடையிடையே கோபப்படுகிறான் இருந்தாலும் தன் நிலைப்பாட்டுக்காக, ஆதிரை - கரிகாலன் திருமணத்தை நடத்த எந்த இடையூறும் பண்ணிடக் கூடாது அதனால சாமி முன்னாடி சத்தியம் பண்ணுங்க என்று கூறுகிறார் குணசேகரன். ரேணுகா நாங்க ஏன் சத்தியம் செய்யணும் நீங்க என்ன சாமிய உங்க கூட்டாளினு நினைக்கிறீங்களோ. அவுக உங்க தப்புக்குலாம் துணைக்கு வருவாங்களோ என கோபத்தில் கூறுகிறாள். உங்க நிலைப்பாடு தெரியாதா எங்களுக்கு, உங்களுக்கு சாதகமா வந்தா ஜாதகத்த நம்புவீங்க, சாதகமா வரலன்னா அத நம்பமாட்டீங்க. சாமி உங்களுக்கு நல்லது செஞ்சா நம்புவீங்க செய்யலன்னா சாமிய தூக்கி தூற போட்டுருவீங்க இதான் உங்க ஆன்மீக நிலைப்பாடு என்று கூறுகிறாள் ரேணுகா.

அதற்கு ஆமாம்மா அப்படித்தான். யார் யார் எனக்கு துரோகம் பண்றாங்கன்னு நான்லாம் ஈஸியா கண்டுபிடிச்சிடுவேன். இந்த திறமை இருக்கிறதாலதான் நான் அத்தன பேர மிதிச்சி மேல வந்துருக்கேன். எனக்கு துரோகம் பண்றவங்கள கரக்ட்டா கண்டுபிடிச்சிடுறேன். அப்போது ஈஸ்வரியின் அப்பா குறுக்கிட்டு, அப்ப மோசடி பண்ணித்தான் மேல வந்தீங்கன்னு ஒத்துக்குறீங்க சரியா என்று கேட்க, அது மோசடி கிடையாது சாணக்கியத்தனம் அரசியல்ல சொல்வாங்க இல்லியா அது மாதிரி. பிசினஸ்ல ஏதோ சொல்வாங்களே ஏம்மா தோச கணக்கு பாத்த நாம்பெத்த பொண்ணே உன்ன படிக்க வச்ச பாவத்துக்கு இதையாச்சும் சொல்லு என்கிறார் குணசேகரன்.

குணசேகரனின் மகள் இதற்கான பதிலை யோசித்து சொல்கிறாள். டாக்டிஸ் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்கிறான். அப்போது ஈஸ்வரி குறுக்கிட்டு ஏங்க இப்ப கத்திட்டு இருக்கீங்க உங்களுக்கு சத்தியம் பண்ணனும் அவ்ளோதான என்று கேட்க, அதுலாம் ஒரு மண்ணும் வேண்டாம் நான் பாத்துக்குறேன் நான்தான் ஜெயிக்கப்போறேன் என்று கூறிவிட்டு உறவினர்களை சாப்பிட்டு போயி ரெஸ்ட் எடுக்க சொல்கிறார்.

கரிகாலன் கோவிலில் பிரசாதம் எடுத்துட்டு வந்து சக்தி, ஜனனி, ஆதிரை, நந்தினி ஆகியோருக்கு கொடுக்க யாரும் சாப்பிடாமல் அவனை திருப்பி அனுப்புகின்றனர். அப்போது கரிகாலன் என் மீது கோபம் இருக்கலாம் ஆனால் இது கோவில் பிரசாதம் நீங்க சாப்பிடுங்க என்று கூறிவிட்டு தன் நண்பனிடம் சென்று பார்க்கிறான்.

கரிகாலனின் நண்பன் காலையில் டீ கடையில் மொபைலில் எடுத்த புகைப்படத்தை எதேச்சையாக பார்க்க அது கரிகாலனின் கண்களில் படுகிறது. அது அருண். அருண் இங்கேதான் இருக்கிறான் என கதிரிடம் போய் காட்டுகிறான். இதனால் கோப்பட்ட கதிர் ஜனனியிடம் சண்டைக்கு போக, சக்தி அவனை தடுக்கிறான்.

உடனே காரில் ஏறி அனைவரும் காலையில் டீ குடித்த ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு பக்கத்தில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. இதனால் நந்தினி பதற்றத்தில் இருக்கிறாள். ஆதிரையும் பயத்தில் அய்யயோ என்று இருக்கிறாள்.

ஒரு பக்கம் கதிர், கரிகாலன் தேடி போக, மறுபக்கம் அருணின் அண்ணன் அரசு தன் அடியாட்களை வைத்து மிகக் கடுமையாக தேடிக் கொண்டிருக்கிறான். ஜான்சி ராணி இவர்கள் மீது கோபத்தில் இருக்கிறார். மூவரையும் திட்டிக் கொண்டு இருக்கிறாள். கதிரும் கரிகாலனும் காரிலிருந்து இறங்கி ஹோட்டலுக்கு செல்கிறார்கள்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 26th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Updated On: 26 May 2023 10:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது