/* */

Ethirneechal மொபைலில் சிக்கிய அருண்! மொத்தமாக குழம்பிய ஜனனி!

ஆதிரையைத் திருமணம் செய்யப் போவது கரிகாலனா? அருணா என்கிற பதைபதைப்பை ரசிகர்கள் உணர்கிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதையை கொண்டு போகிறார் இயக்குநர். இந்த வார எபிசோடில் ஜனனிக்கு புதிதாக ஒரு சிக்கல் வர இருக்கிறது. அதை சமாளித்து ஆதிரை - அருண் திருமணத்தை நடத்தி வைப்பாரா ஜனனி?

HIGHLIGHTS

Ethirneechal மொபைலில் சிக்கிய அருண்! மொத்தமாக குழம்பிய ஜனனி!
X

ஆதிரையைத் திருமணம் செய்யப் போவது கரிகாலனா? அருணா என்கிற பதைபதைப்பை ரசிகர்கள் உணர்கிறார்கள். அந்த அளவுக்கு திரைக்கதையை கொண்டு போகிறார் இயக்குநர். இந்த வார எபிசோடில் ஜனனிக்கு புதிதாக ஒரு சிக்கல் வர இருக்கிறது. அதை சமாளித்து ஆதிரை - அருண் திருமணத்தை நடத்தி வைப்பாரா ஜனனி?

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 24 May 2023

வீட்டிலுள்ள ரேணுகா, ஈஸ்வரி, அம்மா விசாலாட்சி மற்ற உறவினர்களை எல்லாம் அழைத்து முன் வீட்டில் குணசேகரன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது ஞானத்தைக் காணோம் என்று கேட்கிறார் குணசேகரன். இதனால் அங்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. கோபத்தில் ரேணுகா நீங்க உங்க தம்பிய மனுசனா மதிக்க மாட்டீங்க. உங்க தம்பி குடிகாரப் பய என் வீட்டுக்காரர அடிச்சிருக்கான் அத கேக்கமாட்டீங்க. கதிர பாத்தா நலம் விசாரிக்குறது. எம்புருசன் வந்தா பேசாம போயி தூங்கிடுறீங்க என்று கோபத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்.

குணசேகரனும் இடையிடையே கோபப்படுகிறான் இருந்தாலும் தன் நிலைப்பாட்டுக்காக, ஆதிரை - கரிகாலன் திருமணத்தை நடத்த எந்த இடையூறும் பண்ணிடக் கூடாது அதனால சாமி முன்னாடி சத்தியம் பண்ணுங்க என்று கூறுகிறார் குணசேகரன். ரேணுகா நாங்க ஏன் சத்தியம் செய்யணும் நீங்க என்ன சாமிய உங்க கூட்டாளினு நினைக்கிறீங்களோ. அவுக உங்க தப்புக்குலாம் துணைக்கு வருவாங்களோ என கோபத்தில் கூறுகிறாள். உங்க நிலைப்பாடு தெரியாதா எங்களுக்கு, உங்களுக்கு சாதகமா வந்தா ஜாதகத்த நம்புவீங்க, சாதகமா வரலன்னா அத நம்பமாட்டீங்க. சாமி உங்களுக்கு நல்லது செஞ்சா நம்புவீங்க செய்யலன்னா சாமிய தூக்கி தூற போட்டுருவீங்க இதான் உங்க ஆன்மீக நிலைப்பாடு என்று கூறுகிறாள் ரேணுகா.

அதற்கு ஆமாம்மா அப்படித்தான். யார் யார் எனக்கு துரோகம் பண்றாங்கன்னு நான்லாம் ஈஸியா கண்டுபிடிச்சிடுவேன். இந்த திறமை இருக்கிறதாலதான் நான் அத்தன பேர மிதிச்சி மேல வந்துருக்கேன். எனக்கு துரோகம் பண்றவங்கள கரக்ட்டா கண்டுபிடிச்சிடுறேன். அப்போது ஈஸ்வரியின் அப்பா குறுக்கிட்டு, அப்ப மோசடி பண்ணித்தான் மேல வந்தீங்கன்னு ஒத்துக்குறீங்க சரியா என்று கேட்க, அது மோசடி கிடையாது சாணக்கியத்தனம் அரசியல்ல சொல்வாங்க இல்லியா அது மாதிரி. பிசினஸ்ல ஏதோ சொல்வாங்களே ஏம்மா தோச கணக்கு பாத்த நாம்பெத்த பொண்ணே உன்ன படிக்க வச்ச பாவத்துக்கு இதையாச்சும் சொல்லு என்கிறார் குணசேகரன்.

குணசேகரனின் மகள் இதற்கான பதிலை யோசித்து சொல்கிறாள். டாக்டிஸ் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்கிறான். அப்போது ஈஸ்வரி குறுக்கிட்டு ஏங்க இப்ப கத்திட்டு இருக்கீங்க உங்களுக்கு சத்தியம் பண்ணனும் அவ்ளோதான என்று கேட்க, அதுலாம் ஒரு மண்ணும் வேண்டாம் நான் பாத்துக்குறேன் நான்தான் ஜெயிக்கப்போறேன் என்று கூறிவிட்டு உறவினர்களை சாப்பிட்டு போயி ரெஸ்ட் எடுக்க சொல்கிறார்.

கரிகாலன் கோவிலில் பிரசாதம் எடுத்துட்டு வந்து சக்தி, ஜனனி, ஆதிரை, நந்தினி ஆகியோருக்கு கொடுக்க யாரும் சாப்பிடாமல் அவனை திருப்பி அனுப்புகின்றனர். அப்போது கரிகாலன் என் மீது கோபம் இருக்கலாம் ஆனால் இது கோவில் பிரசாதம் நீங்க சாப்பிடுங்க என்று கூறிவிட்டு தன் நண்பனிடம் சென்று பார்க்கிறான்.

கரிகாலனின் நண்பன் காலையில் டீ கடையில் மொபைலில் எடுத்த புகைப்படத்தை எதேச்சையாக பார்க்க அது கரிகாலனின் கண்களில் படுகிறது. அது அருண். அருண் இங்கேதான் இருக்கிறான் என கதிரிடம் போய் காட்டுகிறான். இதனால் கோப்பட்ட கதிர் ஜனனியிடம் சண்டைக்கு போக, சக்தி அவனை தடுக்கிறான்.

உடனே காரில் ஏறி அனைவரும் காலையில் டீ குடித்த ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு பக்கத்தில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. இதனால் நந்தினி பதற்றத்தில் இருக்கிறாள். ஆதிரையும் பயத்தில் அய்யயோ என்று இருக்கிறாள்.

ஒரு பக்கம் கதிர், கரிகாலன் தேடி போக, மறுபக்கம் அருணின் அண்ணன் அரசு தன் அடியாட்களை வைத்து மிகக் கடுமையாக தேடிக் கொண்டிருக்கிறான். ஜான்சி ராணி இவர்கள் மீது கோபத்தில் இருக்கிறார். மூவரையும் திட்டிக் கொண்டு இருக்கிறாள். கதிரும் கரிகாலனும் காரிலிருந்து இறங்கி ஹோட்டலுக்கு செல்கிறார்கள்.

Ethirneechal சிக்கலில் மாட்டிய ஜனனி! அருண்-ஆதிரை திருமணம் நடக்குமா?

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 23 May 2023

நல்லவேள இங்க ரேணுகா அக்காவும் ஈஸ்வரி அக்காவும் இல்ல என்று நந்தினி கூறிக்கொண்டே, அது சரி அவங்களுக்கு அங்க என்ன பிரச்னையோ என்று சொல்லுகிறாள்.

அரசு தன் அடியாட்களுடன் அருணைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சாருபாலா அவருக்கு அழைக்கிறார். அருணை வைத்து குணசேகரன் கேம் ஆடுகிறான் என்று கோபத்தில் கூறுகிறார். அப்போது கோபப்படும் சாருபாலா, தன் அலுவலகத்துக்கு வந்த குணசேகரனிடம் கடு கடு என எரிந்து விழுகிறார். இது என்ன வென்று புரியாத குணசேகரன் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு ஈஸ்வரி, ரேணுகாவை குணசேகரனின் உறவினர்கள் இவர்கள் என்ன சமையல் செய்ய சலித்துக் கொள்கிறார்கள் என குணசேகரனிடமே புகார் செய்கிறார்கள். அதற்கு ஈஸ்வரி சில விசயங்களைக் கூறுகிறார். வீட்டில் மொத்தம் 20 பேர் இருக்கிறோம். குழந்தைகளுக்கு 3, பெண்களுக்கு 4, ஆண்களுக்கு 5,6 தோசை என ஒரு நாளைக்கே 100க்கும் அதிக எண்ணிக்கையில் தோசை சுட வேண்டும். அதில் ஒருவருக்கு வெங்காயத்தோசை, ஒருவருக்கு நெய் தோசை, இன்னொருவருக்கு முட்டை தோசை, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என ஆளாளுக்கு ஒரு வகையில் சுட வேண்டியிருக்கிறது. இதை செய்ய 3 மணி நேரம் ஆகும். அதுவும் சூடா சாப்பிட வேண்டும். என அவர் செய்யும் வேலைகளை அடுக்குகிறார்.

அலங்காரம் செய்யப்பட்டு பளபள என இருக்கும் பொம்மையைப் போன்றுதான் நாங்களும் பார்க்க பள பளவென இருக்கும் என்று கூறியதும் இதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன் திடீரென போதும்மா நிறுத்துங்கமா என்று சத்தமிடுகிறான். அப்போது குணசேகரனின் அம்மா பேச ஆரம்பிக்கிறார். தனது மனதில் ஆயிரத்தெட்டு கஷ்டங்கள் இருப்பதை ஆணவம் குறையாமல் எடுத்து கூறுகிறார் குணசேகரன். தன் தம்பிகளுக்குள் சண்டையை மூட்டி விட்டு ஞானம் ஒரு பக்கம் போயிட்டான். கதிர் கோவிலுக்கு போயிட்டான். இப்ப நான் மட்டும் தனியா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் என்று கூறுகிறான்.

ஆமா நான் டீ கேட்டேனே என்ன ஆச்சு என்று கேட்டுவிட்டு மாமா நீங்க மோர் கேட்டீங்கள்ல. பாருங்க உங்க மக ஒன்னர மணி நேரமா பேசிட்டு இருக்கா எங்க சொல்றத கேக்குறா என்று கூறிவிட்ட போங்க டீ கொண்டு வாங்க என்று அனுப்புகிறார் குணசேகரன்.

கோவிலில் கரிகாலன் தன் நண்பனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். இந்த பக்கம் ஜனனி, சக்தி கவலையில் உக்கார்ந்து இருக்கிறார்கள். பூஜைக்கு ரெடி ஆகிவிட்டது வாங்க என்று தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் ஆதிரையுடன் கரிகாலனை வீடியோ எடுத்து நம்ம தலைவரோட பாட்ட பேக்ரவுண்டல போட்டா செம்மயா இருக்கும் என்று கூறுகிறார்.

கரிகாலனையும் ஆதிரையையும் ஒரே இடத்தில் உக்கார வைக்கின்றனர். ஆனால் ஆதிரை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நந்தினியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அங்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. நந்தினி அத்தையிடம் கால் பண்ணி கேளுங்க என்கிறாள். கரிகாலன் ஆதிரையை கடுப்பேத்திக் கொண்டிருக்கிறான் இதனால் அவள் கோபமடைகிறாள். பூஜையும் நல்லபடியாக முடிவடைகிறது.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 25 May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Updated On: 24 May 2023 4:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...