/* */

Ethirneechal எகிறிய கதிர்...! ஜனனி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! அதிர்ந்த கோவில்!

காரில் சென்ற கதிர், கரிகாலன் கண்களிலிருந்து தப்பி விட்டாலும் அதே ஊரில்தான் அவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்பதால் பதைபதைப்பில் இருக்கிறாள் ஜனனி. ஒரு பக்கம் அருணின் அண்ணன் அரசுவும் வலை வீசி அருணைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவர் குணசேகரன்தான் அருணைக் கடத்தி வைத்திருப்பதாக நினைக்கிறார்.

HIGHLIGHTS

Ethirneechal எகிறிய கதிர்...! ஜனனி கொடுத்த ஷாக் ட்ரீட்மெண்ட்! அதிர்ந்த கோவில்!
X

காரில் சென்ற கதிர், கரிகாலன் கண்களிலிருந்து தப்பி விட்டாலும் அதே ஊரில்தான் அவர்கள் தங்கி இருக்கிறார்கள் என்பதால் பதைபதைப்பில் இருக்கிறாள் ஜனனி. ஒரு பக்கம் அருணின் அண்ணன் அரசுவும் வலை வீசி அருணைத் தேடிக் கொண்டிருக்கிறார். அவர் குணசேகரன்தான் அருணைக் கடத்தி வைத்திருப்பதாக நினைக்கிறார்.

எதிர் நீச்சல் இன்றைய எபிசோட் | Ethir neechal serial today episode youtube 23rd May 2023

நல்லவேள இங்க ரேணுகா அக்காவும் ஈஸ்வரி அக்காவும் இல்ல என்று நந்தினி கூறிக்கொண்டே, அது சரி அவங்களுக்கு அங்க என்ன பிரச்னையோ என்று சொல்லுகிறாள்.

அரசு தன் அடியாட்களுடன் அருணைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சாருபாலா அவருக்கு அழைக்கிறார். அருணை வைத்து குணசேகரன் கேம் ஆடுகிறான் என்று கோபத்தில் கூறுகிறார். அப்போது கோபப்படும் சாருபாலா, தன் அலுவலகத்துக்கு வந்த குணசேகரனிடம் கடு கடு என எரிந்து விழுகிறார். இது என்ன வென்று புரியாத குணசேகரன் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு ஈஸ்வரி, ரேணுகாவை குணசேகரனின் உறவினர்கள் இவர்கள் என்ன சமையல் செய்ய சலித்துக் கொள்கிறார்கள் என குணசேகரனிடமே புகார் செய்கிறார்கள். அதற்கு ஈஸ்வரி சில விசயங்களைக் கூறுகிறார். வீட்டில் மொத்தம் 20 பேர் இருக்கிறோம். குழந்தைகளுக்கு 3, பெண்களுக்கு 4, ஆண்களுக்கு 5,6 தோசை என ஒரு நாளைக்கே 100க்கும் அதிக எண்ணிக்கையில் தோசை சுட வேண்டும். அதில் ஒருவருக்கு வெங்காயத்தோசை, ஒருவருக்கு நெய் தோசை, இன்னொருவருக்கு முட்டை தோசை, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என ஆளாளுக்கு ஒரு வகையில் சுட வேண்டியிருக்கிறது. இதை செய்ய 3 மணி நேரம் ஆகும். அதுவும் சூடா சாப்பிட வேண்டும். என அவர் செய்யும் வேலைகளை அடுக்குகிறார்.

Ethirneechal கலாய்த்து ஓட விடும் பெண்கள்! குணசேகரன் செய்யப்போகும் அடுத்த அதிரடி!

அலங்காரம் செய்யப்பட்டு பளபள என இருக்கும் பொம்மையைப் போன்றுதான் நாங்களும் பார்க்க பள பளவென இருக்கும் என்று கூறியதும் இதுவரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த குணசேகரன் திடீரென போதும்மா நிறுத்துங்கமா என்று சத்தமிடுகிறான். அப்போது குணசேகரனின் அம்மா பேச ஆரம்பிக்கிறார். தனது மனதில் ஆயிரத்தெட்டு கஷ்டங்கள் இருப்பதை ஆணவம் குறையாமல் எடுத்து கூறுகிறார் குணசேகரன். தன் தம்பிகளுக்குள் சண்டையை மூட்டி விட்டு ஞானம் ஒரு பக்கம் போயிட்டான். கதிர் கோவிலுக்கு போயிட்டான். இப்ப நான் மட்டும் தனியா கெடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கேன் என்று கூறுகிறான்.

ஆமா நான் டீ கேட்டேனே என்ன ஆச்சு என்று கேட்டுவிட்டு மாமா நீங்க மோர் கேட்டீங்கள்ல. பாருங்க உங்க மக ஒன்னர மணி நேரமா பேசிட்டு இருக்கா எங்க சொல்றத கேக்குறா என்று கூறிவிட்ட போங்க டீ கொண்டு வாங்க என்று அனுப்புகிறார் குணசேகரன்.

கோவிலில் கரிகாலன் தன் நண்பனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான். இந்த பக்கம் ஜனனி, சக்தி கவலையில் உக்கார்ந்து இருக்கிறார்கள். பூஜைக்கு ரெடி ஆகிவிட்டது வாங்க என்று தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நண்பர் ஆதிரையுடன் கரிகாலனை வீடியோ எடுத்து நம்ம தலைவரோட பாட்ட பேக்ரவுண்டல போட்டா செம்மயா இருக்கும் என்று கூறுகிறார்.

கரிகாலனையும் ஆதிரையையும் ஒரே இடத்தில் உக்கார வைக்கின்றனர். ஆனால் ஆதிரை அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. நந்தினியும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் அங்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படுகிறது. நந்தினி அத்தையிடம் கால் பண்ணி கேளுங்க என்கிறாள். கரிகாலன் ஆதிரையை கடுப்பேத்திக் கொண்டிருக்கிறான் இதனால் அவள் கோபமடைகிறாள். பூஜையும் நல்லபடியாக முடிவடைகிறது.

எதிர்நீச்சல் நேற்று எபிசோட் | Ethir neechal serial yesterday episode youtube 22nd May 2023

மது பாட்டில் இருக்கிறதா கொண்டு வந்தீங்களா மாமா என்று கதிரிடம் கரிகாலன் கேட்க அதற்கு இது கோவில்டா இங்கெல்லாம் எப்படி. நான் கொண்டு வரல என்றார் கதிர். அதற்கு மாமா கார்ல வச்சிருப்பீங்களே என பேசிக் கொண்டிருக்கும்போது கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி, இதுலாம் தப்பில்ல அண்ணே. பூஜை முடிஞ்சதும் ஏற்பாடு பண்ணுவோம். பரவால சாமி ஒன்னும் சொல்லாது. வீட்டுக்கு வாங்க நிறைய உங்களுக்கு புடிச்சது தரோம் என தனது புராணத்தை எடுத்து விடுகிறார்.

இந்த பக்கம் நந்தினி பாருங்க சாராயம் குடிக்குறவனும் சாராயம் காய்ச்சுரவளும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. உருப்படுறதுக்கா என்று தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் அருணுக்கு கால் செய்து பேசு சக்தி என்று ஜனனி ஆரம்பிக்கிறார். அப்போது ஆதிரை பதைபதைப்பில் இருக்கிறார். அங்கு வரும் கரிகாலன் தன்னோடு வரும்படியும் ஆதிரையுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவேண்டும் எனவும் பேசுகிறான். அந்த நேரத்தில் அங்கு கரிகாலனின் நண்பர் ஒருவர் வருகிறார்.

ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்தலாம் என ஆதிரை கையைப் பிடித்து இழுக்கிறான் . அங்கு வந்த சக்தி அதை தடுக்க, ஜனனியும் முறைக்கிறாள். நந்தினி கரிகாலனைத் திட்டுகிறாள். கதிரும் அங்கு வருகிறார். நந்தினியின் பேச்சை கேட்காமல் கரிகாலனை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்.

நல்லவேள இங்க ரேணுகா அக்காவும் ஈஸ்வரி அக்காவும் இல்ல என்று நந்தினி கூறிக்கொண்டே, அது சரி அவங்களுக்கு அங்க என்ன பிரச்னையோ என்று சொல்லுகிறாள்.

அரசு தன் அடியாட்களுடன் அருணைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது சாருபாலா அவருக்கு அழைக்கிறார். அருணை வைத்து குணசேகரன் கேம் ஆடுகிறான் என்று கோபத்தில் கூறுகிறார். அப்போது கோபப்படும் சாருபாலா, தன் அலுவலகத்துக்கு வந்த குணசேகரனிடம் கடு கடு என எரிந்து விழுகிறார். இது என்ன வென்று புரியாத குணசேகரன் வீட்டுக்கு செல்கிறார்.

அங்கு ஈஸ்வரி, ரேணுகாவை குணசேகரனின் உறவினர்கள் இவர்கள் என்ன சமையல் செய்ய சலித்துக் கொள்கிறார்கள் என குணசேகரனிடமே புகார் செய்கிறார்கள். அதற்கு ஈஸ்வரி சில விசயங்களைக் கூறுகிறார். வீட்டில் மொத்தம் 20 பேர் இருக்கிறோம். குழந்தைகளுக்கு 3, பெண்களுக்கு 4, ஆண்களுக்கு 5,6 தோசை என ஒரு நாளைக்கே 100க்கும் அதிக எண்ணிக்கையில் தோசை சுட வேண்டும். அதில் ஒருவருக்கு வெங்காயத்தோசை, ஒருவருக்கு நெய் தோசை, இன்னொருவருக்கு முட்டை தோசை, தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி என ஆளாளுக்கு ஒரு வகையில் சுட வேண்டியிருக்கிறது. இதை செய்ய 3 மணி நேரம் ஆகும். அதுவும் சூடா சாப்பிட வேண்டும். என அவர் செய்யும் வேலைகளை அடுக்குகிறார்.

எதிர்நீச்சல் நாளைய எபிசோட் | Ethir neechal serial tomorrow episode youtube 24th May 2023

ஆதிரை திருமணத்துக்கு சம்மதித்து குணசேகரன் மூக்கை அறுக்க ஜனனியுடன் சேர்ந்து திட்டம் தீட்டியிருக்கிறார்கள். இதனால் கரிகாலன் - ஆதிரை திருமணத்தின்போது என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Updated On: 12 July 2023 4:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!