/* */

அடுத்தடுத்து சண்டை போடும் பிரதீப்! என்ன ஸ்ட்ராட்டஜி பாஸ் இது?

சண்டைக் கோழியாக மாறி அனைவருடனும் சண்டைக்கு போகிறார் பிரதீப் ஆண்டனி இதனால் இன்றைய பிக்பாஸ் போட்டி பரபரப்பாக இருக்கப் போகிறது.

HIGHLIGHTS

அடுத்தடுத்து சண்டை போடும் பிரதீப்! என்ன ஸ்ட்ராட்டஜி பாஸ் இது?
X

பிக்பாஸ் தமிழ் சீசன் 7ன் முதல் நாளே அதிரடியாக சில சண்டைகள், வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பிக்பாஸ் சீசன் 7 முதல் வாரத்திலேயே பிரமாதமாக சண்டைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ். இரண்டாவது புரோமோவில் பிரதீப் ஆண்டனி காண்டாகி இருக்கிறார்.

தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இப்போது துவங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

முதல்நாளான அறிமுகநாளில் கமல்ஹாசன் அனைவரையும் உள்ளே அனுப்பி வாழ்த்து தெரிவித்து விடைபெற்றார். இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு பல போட்டிகளை வைத்து சோதிப்பார். வழக்கமான நடைமுறை இதுவாக இருந்தாலும் இப்போது வீட்டில் நுழைந்தவுடனேயே போட்டி தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7ல் பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

கடைசியாக வந்த விஜய் வர்மாவுக்கு இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவர் பதவி கிடைத்தது. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புரோமோவில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் வர்மாவை அதிகம் கவராத 6 போட்டியாளர்களை இரண்டாவது வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். பிக்பாஸின் இந்த அதிரடி முடிவு முதல்நாளே பலரையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. என்றாலும் அவர்கள் இதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்து மற்ற விதிகளும் போடப்படும் என்று கூறப்படுகிறது.

  • ஐஸு
  • நிக்ஷன்
  • பவா செல்லதுரை
  • அனன்யா
  • வினுஷா
  • ரவீனா

இந்த ஆறு பேரும்தான் இன்னொரு வீட்டுக்கு அனுப்பபடுகிறார்கள். இதில் முக்கியமான ஒரு விதி என்னவென்றால் அவர்கள் 6 பேருக்கும் பிக்பாஸின் உதவி இருக்காது. அவர்களுக்கு குட்டி பாஸ் ஒருத்தர் இருக்கிறார். இதனால் என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. ஒரு வீட்டில் 6 பேர், இன்னொரு வீட்டில் 12பேர் என பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து பிக்பாஸை தொடங்கியுள்ளார் பிக்பாஸ்.

எலிமினேசன்

பொதுவாக ஒரே வீட்டில் இருந்தால் நாமினேஷன் என இரண்டு பேரை நாமினேட் செய்யச் சொல்லி கேட்பார் பிக்பாஸ் இம்முறை இரண்டு வீடுகள் என்பதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் சிறிய வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்யலாம். சிறிய வீட்டில் இருப்பவர்கள் பெரிய வீட்டில் இருப்பவர்களை நாமினேட் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார் பிக்பாஸ்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஸு, பவா செல்லதுரை, ரவீனா, அனன்யா ராவ் ஆகிய 4 பேரை நாமினேட் செய்து வைத்துள்ளனர். ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, ஜோவிகா ஆகி 3 பேரை நாமினேட் செய்துள்ளனர். இவர்கள் 7 பேரில் யார் இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இப்போதே ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள்.

முட்டிக் கொள்ளும் விசித்ரா, பிரதீப்

இன்று வெளியான முதல் புரோமோவில் விசித்ராவும், பிரதீப்பும் முட்டிக் கொள்ளும் வகையில் சந்தர்ப்பம் ஒன்று அமைகிறது. பிக்பாஸ் போட்ட விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதன்படி ஸ்மால்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் மட்டும்தான் சமைக்க வேண்டும். அந்த விதியை மீறியுள்ள விசித்ரா மற்றும் யுகேந்திரனை ஸ்மால்பாஸ் வீட்டுக்கு அனுப்ப திட்டமிடுகிறார் பிக்பாஸ்.

இந்த நேரம் பார்த்து பிரதீப் அங்கிருந்து நாமினேட் ஆகாத இருவரை இந்த வீட்டுக்கு தூக்கிட்டு வாங்க என்று சொல்ல, விசித்ரா அதனைப் பிடித்துக் கொண்டு சண்டை போடுகிறார். என்ன சொல்றீங்க என்று கேட்க, நீங்க ரெண்டு பேர் அங்க போயிட்டீங்கன்னா எங்களுக்கு ரெண்டு பேர் வேணுமில்லையா என்று கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் விசித்ரா, எங்க ரெண்டு பேருக்கு நிகராக அந்த பக்கத்தில் இரண்டு பேர் இருக்காங்களா என்று கூறுகிறார். இதனால் மோதல் ஏற்படுகிறது.

கேப்டனுடன் மோதும் பிரதீப்

அடுத்து பிரதீப் தொடர்ந்து சண்டை போடும் வகையிலேயே பேசுகிறார். இம்முறை கேப்டனாக இருக்கும் விஜய் வர்மாவுடன் மோதும் நிலை ஏற்படுகிறது. ஆனால் அசராமல் பதிலடி கொடுக்கிறார் விஜய் வர்மா. இதில் விஜய் பக்கமே நியாயம் இருப்பதாக பலரும் கருதுகின்றனர். இதனால் பிரதீப் பார்ப்பவர்களை எல்லாம் சண்டை போடும் வகையில் இருப்பது போல புரோமோ காட்டப்பட்டுள்ளது.

Updated On: 3 Oct 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இரத்த தானம் செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்..? தெரிஞ்சுக்கங்க..!
  2. உசிலம்பட்டி
    அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நாள் உறுதி மொழி ஏற்பு
  3. உலகம்
    வேற்றுக்கிரக வாசிகள் நிலவுக்குள் வசிக்கிறார்களா? - ஹார்வர்ட்...
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை திருப்பரங்குன்றம் திருமணவிழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு விற்பனையான மாடுகள்
  6. பொள்ளாச்சி
    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை: ஈஸ்வரசாமி...
  7. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக புகார்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா..!
  9. லைஃப்ஸ்டைல்
    முல்லீன் டீ குடிக்கலாம் வாங்க..! ஆரோக்ய பானம்..!
  10. நாமக்கல்
    அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு...