வீட்டை விட்டு வெளியேற போகிறாரா ஜி.பி. முத்து?

வீட்டை விட்டு வெளியேற போகிறாரா ஜி.பி. முத்து?
X

 bigg boss 6 gp muthu request- ஜி.பி. முத்து

Bigg Boss 6 GP Muthu Request- தன் குடும்பத்தினரை பார்க்காமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, ஆனந்துடன் பேசியே தீர வேண்டும் என்ற ஜி.பி முத்து, வீட்டை விட்டு வெளியேறி விடுவாரோ என, 'பிக்பாஸ்' ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss 6 GP Muthu Request- ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவதாக கசிந்துள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அண்மையில் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மைனா நந்தினி 'வைல்ட் கார்ட் எண்ட்ரி'யாக 'பிக்பாஸ்' வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டியாளர்களில் ஜி.பி. முத்து, சோஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளார். 'டிக்டாக்' மூலம் பிரபலமான இவர், அதன் தடைக்கு பின்னர் யுடியூப் பக்கம் கரை ஒதுங்கினார். சோஷியல் மீடியாவில் இவர் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் மிக பிரபலம். அதற்கென்றே தனியொரு ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.


இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஜிபி முத்து, இரண்டாவது வாரத்தில் வீட்டின் தலைவராகியுள்ளார். இவரின் ஒவ்வொரு செயலும், சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் முதல் வாரமே சக போட்டியாளர் தனலட்சுமிக்கும் இவருக்கும் இடையே சண்டை வெடித்தது. தன்னை நடிப்பதாக அவர் கூறியதால், ஜிபி முத்து கண் கலங்கிய நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே 'டல்'லாக இருந்த ஜிபி முத்து, தற்போது தன்னால் முடியவில்லை என்றும், ஒரு மாதிரியாக இருப்பதாகவும் கேமரா முன் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னுடைய தம்பிகள் ஆனந்த், மணியிடம் பேச வேண்டுமென கூறியுள்ளார். இந்த வீடியோ பார்த்த உடனே ஏதாவது பண்ணுமாறும், பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்போதே தான் சொல்லிவிட்டு சென்றதாகவும் பேசியுள்ளார்.


இதனால் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக, இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தன்னுடைய குடும்பத்தினருடன் பேசிவிட்டால், ஜிபி முத்து சரியாகிவிடுவார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


சில தினங்களுக்கு முன்பாக, குடும்பத்தினர் நினைவால் வருத்தப்பட்டு கண்ணீர் விட்ட ஜி.பி முத்துவை கன்பெக்‌ஷன் ரூமுக்குள் அழைத்து பேசிய பிக்பாஸ், அவரை ஆறுதல்படுத்தி, ஊக்கப்படுத்தினார். 'டிக்டாக் மூலம், தமிழக மக்களிடையே பிரபலமான நீங்கள், இப்போது பிக்பாஸ் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் மக்கள் பேசும் மக்களிடம் பிரபலமாகி விட்டீர்கள். இந்த நிகழ்ச்சியில் நீடித்து வெற்றி பெற, நம்பிக்கையுடன் செயல்படுங்கள்' என, அட்வைஸ் செய்தார்.

இந்நிலையில், வெளியேறுவதாக ஜி.பி முத்து கூறினாலும், அவரை ஆறுதல்படுத்தி நிகழ்ச்சியில் தொடரவே பிக்பாஸ் செய்வார் என, ஒருதரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
application of ai in agriculture