Anna Serial update ஜோதிடன் கொடுத்த ஷாக்! தங்கைகளுக்காக அண்ணன் செய்யும் காரியம்!

Anna Serial update ஜோதிடன் கொடுத்த ஷாக்! தங்கைகளுக்காக அண்ணன் செய்யும் காரியம்!
X
தங்கைகளின் ஆசையை அறியாமல் தன்னுடைய எண்ணங்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான் சண்முகம். ஆனால்!?

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் | Anna serial zee tamil today episode youtube 23 May 2023

நேற்றைய எபிசோடில் சண்முகம் ரவுடிகளை பேசியே ஓட விட்டதை நினைத்து அவனது தங்கைகள் நாலவரும் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்கே கடையிலும் நாயகன் புகழ் பாடப்படுகிறது. கூடுதலாக காசு வாங்கமாட்டான். குடுத்த காசுக்கு குறைவா எதுவும் குடுக்கமாட்டான் என்பதை ஒரு காட்சியில் காட்டியிருக்கிறார்கள். அப்போது கடைக்கு ஒருவர் வருகிறார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை சண்முகத்துக்கு நினைவூட்டுகிறார். செவ்வாய்க்கிழமை என்றறிந்ததும் வேக வேகமாக சர்ச்சுக்கு கிளம்பிச் செல்கிறான் சண்முகம்.

எம்மதமும் சம்மதம் என்று எல்லா சாமிகளையும் கும்பிடும் சண்முகம் வாரம் ஒருமுறை சர்ச்சுக்கு சென்று மெழுகு வர்த்தி ஏற்றி வழிபடுவது வழக்கமான ஒன்று. சண்முகம் சர்ச்சுக்கு செல்லும்போது அவனுடன் வெட்டுக்கிளியும் செல்கிறான்.

இசக்கியம்மாள், ரத்னா, வீரா, செல்லக்கனி என நான்கு தங்கைகளுக்கு எதிர்காலம் திருமணம் குறித்து வேண்டிக் கொள்கிறான் சண்முகம்.

ரத்னாவுக்காக முதல் மெழுகுவர்த்தியை ஏற்றி பள்ளி வாத்தியாரைக் கட்டிக்கிட்டு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான். ஆனால் அவளுக்கு ஒரு பள்ளியையே நிர்வாகம் செய்யவேண்டும், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கவேண்டும் என்று ஆசை.

இரண்டாவதாக வீரலட்சுமிக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அவளுக்கு அமைதியான மாப்பிள்ளை அமைய வேண்டும் என்று வேண்டுகிறான். ஆனால் வீரலட்சுமிக்கு ஐபிஎஸ் அதிகாரியாகி நகரத்தை தன் கட்டுப்பாட்டில் அமைதியாக வைக்கவேண்டும் என்று ஆசை.


இசக்கியம்மாளுக்காக படிப்பறிவில்லாத அவள் நன்கு சமையல் செய்து அனைவரையும் நன்றாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அவளைப் புரிந்து கொண்டு வாழும் மாப்பிள்ளை வேண்டும் என்று வேண்டுகிறான். ஆனால் இசக்கியம்மாள் தன்னிடம் படிப்பறிவு இல்லை இருந்தாலும் மிகப் பெரிய பணக்காரராக பிசினஸ் உமனாக இருக்க வேண்டும் என ஆசை.

செல்லக்கனிக்கு படித்து பெரிய ஆளாக வேண்டும் என்பது ஆசை என நினைத்து சண்முகம் வேண்டுகிறான். ஆனால் உண்மையில் பாட்டுப்பாடுவதில் மிகச்சிறந்த பெண்ணாகி சினிமாவில் பெரிய பாடகியாக வேண்டும் என்பதுதான் அவளது ஆசையாக இருக்கிறது.

இதனையடுத்து சண்முகம் வீட்டுக்கு ஜோசியர் ஒருவர் வருகிறார். அவரிடம் 4 தங்கைகளின் ஜாதகங்களைக் கொடுத்து திருமண வாழ்க்கைப் பற்றி கேட்கிறார். அப்போது தங்கைகளுக்கு திருமணம் ஆவதற்கு முன்னரே சண்முகத்துக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று அவர் கூற, இனி உங்க இடத்துக்கு போயி பேசிக்கலாம் என அவரை அனுப்பி வைக்கிறார் சண்முகம்.

வீரலட்சுமி, செல்லக்கனி இருவரும் அண்ணனுக்கு முதலில் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம். இந்த ஜென்மத்துல அண்ணன் நமக்கு கல்யாணம் பண்ணிக்காம அது பண்ணிக்காது என்று சொல்ல, இப்போது ஹீரோயின் இன்ட்ரோ ஆகிறார்.

நித்யா ராம் இந்த சீரியலில் பரணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரின் எண்ட்ரி இன்று நடக்கிறது.

அண்ணா சீரியல் நேற்றைய எபிசோட் | Anna serial zee tamil Yesterday episode youtube 22 May 2023

ஜூ தமிழ் தொலைக்காட்சியில் இன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் அண்ணா. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் ஆகியோர் கதாநாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

தொடரின் நாயகன் சண்முகம் திருச்செந்தூரில் 4 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறார். 4 தங்கைகளையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவிட்டு கதாநாயகனின் இன்ட்ரோ காண்பிக்கப்படுகிறது. சண்முகத்தில் தங்கைகள் இசக்கியம்மாள், ரத்னா, மீரா, செல்லக்கனி ஆகியோரின் அறிமுகத்துக்கு பிறகு ஊரில் நடக்கும் திருவிழாவில் அண்ணன் சண்முகம் காவடி எடுக்க இருக்கிறார் என்பதால் தங்கைகள் நால்வரும் விரதம் இருக்க முடிவு செய்கின்றனர்.

தங்கைகளைப் பொத்தி பொத்தி வளர்க்கும் அண்ணனுக்கு தெரியாமல் ஒரு ஸ்மார்ட் ஃபோனை மறைத்து வைத்து பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு செஃல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக கோவில் திருவிழாவில் ஊரில் பெரிய தலைக்கட்டு சௌந்தரபாண்டியன் மற்றும் அவரது மனைவி கலந்து கொள்கின்றனர். அந்த திருவிழாவில் கலந்துகொண்டு பிரச்னை ஏற்படுத்த பூச்சிக்காடு கண்ணன் என்பவரும் அங்கு வந்துள்ளார்.

அங்குள்ள கோவில் திருவிழாவில் எல்லா வருடமும் சண்முகம்தான் காவடி எடுத்து விழாவைத் துவங்கி வைப்பார் என்று நடைமுறை இருக்கும்போது பூச்சிக்காடு கண்ணன் குழப்பத்தை ஏற்படுத்தி எங்க ஆள் ஒருத்தன்தான் காவடி எடுப்பார் என சண்டையிடுகிறார். ஆனால் அவனது ஆள் ஒருவன் வந்து தூக்கியும் தூக்க முடியாமல் நிற்கிறான்.

அந்த நேரத்தில் அங்கு சண்முகம் அறிமுகத்தோடு வருகிறார். முருகன் அருளோடு காவடியைத் தூக்கி சாமியாடிக் கொண்டே கோவிலை நோக்கி நகர்ந்து கொண்டே செல்கிறார். அப்போது அங்கு வரும் ரௌடிகள் சிலர் சண்முகத்தின் தங்கைகளிடம் சில்மிஷம் செய்வோம் என்று கூற, கோபத்தில் சண்முகம் அவர்களை தூக்கிப் போட்டு மிதிக்கிறார். காவடியைத் தூக்கிக் கொண்டே செல்கிறார். திருவிழா நல்லபடியாக நிறைவடைகிறது.

அடுத்தநாள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் சண்முகத்தை செல்லக்கனி எழுப்ப போகிறாள். ஆனால் ரத்னாவோ அவரை எழுப்ப வேண்டாம் தூங்கட்டும் என்று கூறிவிட்டார். கொஞ்சம் நேரம் கழித்து எழுந்த சண்முகம் அவசர அவசரமாக எழுந்து கடைக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருக்கும்போது, தங்கைகள் ஏதோ தன்னிடம் மறைப்பதை உணர்கிறார்.

செல்லக்கனியிடம் கேட்டாள் உண்மையை மட்டும்தான் பேசுவாள் என்பதை நினைத்துப்பார்த்து அவளிடம் கேட்கிறார். நடந்த விசயத்தைக் கூற தன் தங்கைகளிடம் சில்மிசம் செய்த ரௌடிகளை அடி வெளுக்கப் போகிறார்.

ஆனால் அங்கு பக்கம் பக்கமாக டயலாக் பேசி ரௌடிகளைத் தெறித்து ஓடச் செய்கிறார்.

அண்ணா சீரியல் நாளைய எபிசோட் | Anna serial zee tamil tomorrow episode youtube 24 May 2023

இன்னமும் கதாநாயகி அறிமுகம் ஆகவில்லை என்பதால் இரண்டாவது நாள் கதாநாயகி அறிமுகம் ஆகும் காட்சி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
how ai is used in education