Anna Serial update அண்ணா சீரியலின் முதல் நாள் எபிசோட் எப்படி இருக்கு?

Anna Serial update அண்ணா சீரியலின் முதல் நாள் எபிசோட் எப்படி இருக்கு?
X
ஜூ தமிழ் தொலைக்காட்சியில் இன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் அண்ணா. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் ஆகியோர் கதாநாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் | Anna serial zee tamil today episode youtube 22 May 2023

ஜூ தமிழ் தொலைக்காட்சியில் இன்று தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள புத்தம் புதிய தொடர் அண்ணா. இந்த தொடரில் மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் ஆகியோர் கதாநாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.

தொடரின் நாயகன் சண்முகம் திருச்செந்தூரில் 4 தங்கைகளுடன் வாழ்ந்து வருகிறார். 4 தங்கைகளையும் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துவிட்டு கதாநாயகனின் இன்ட்ரோ காண்பிக்கப்படுகிறது. சண்முகத்தில் தங்கைகள் இசக்கியம்மாள், ரத்னா, மீரா, செல்லக்கனி ஆகியோரின் அறிமுகத்துக்கு பிறகு ஊரில் நடக்கும் திருவிழாவில் அண்ணன் சண்முகம் காவடி எடுக்க இருக்கிறார் என்பதால் தங்கைகள் நால்வரும் விரதம் இருக்க முடிவு செய்கின்றனர்.

தங்கைகளைப் பொத்தி பொத்தி வளர்க்கும் அண்ணனுக்கு தெரியாமல் ஒரு ஸ்மார்ட் ஃபோனை மறைத்து வைத்து பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு செஃல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.

அடுத்ததாக கோவில் திருவிழாவில் ஊரில் பெரிய தலைக்கட்டு சௌந்தரபாண்டியன் மற்றும் அவரது மனைவி கலந்து கொள்கின்றனர். அந்த திருவிழாவில் கலந்துகொண்டு பிரச்னை ஏற்படுத்த பூச்சிக்காடு கண்ணன் என்பவரும் அங்கு வந்துள்ளார்.

அங்குள்ள கோவில் திருவிழாவில் எல்லா வருடமும் சண்முகம்தான் காவடி எடுத்து விழாவைத் துவங்கி வைப்பார் என்று நடைமுறை இருக்கும்போது பூச்சிக்காடு கண்ணன் குழப்பத்தை ஏற்படுத்தி எங்க ஆள் ஒருத்தன்தான் காவடி எடுப்பார் என சண்டையிடுகிறார். ஆனால் அவனது ஆள் ஒருவன் வந்து தூக்கியும் தூக்க முடியாமல் நிற்கிறான்.

அந்த நேரத்தில் அங்கு சண்முகம் அறிமுகத்தோடு வருகிறார். முருகன் அருளோடு காவடியைத் தூக்கி சாமியாடிக் கொண்டே கோவிலை நோக்கி நகர்ந்து கொண்டே செல்கிறார். அப்போது அங்கு வரும் ரௌடிகள் சிலர் சண்முகத்தின் தங்கைகளிடம் சில்மிஷம் செய்வோம் என்று கூற, கோபத்தில் சண்முகம் அவர்களை தூக்கிப் போட்டு மிதிக்கிறார். காவடியைத் தூக்கிக் கொண்டே செல்கிறார். திருவிழா நல்லபடியாக நிறைவடைகிறது.

அடுத்தநாள் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கும் சண்முகத்தை செல்லக்கனி எழுப்ப போகிறாள். ஆனால் ரத்னாவோ அவரை எழுப்ப வேண்டாம் தூங்கட்டும் என்று கூறிவிட்டார். கொஞ்சம் நேரம் கழித்து எழுந்த சண்முகம் அவசர அவசரமாக எழுந்து கடைக்கு செல்ல புறப்பட்டு கொண்டிருக்கும்போது, தங்கைகள் ஏதோ தன்னிடம் மறைப்பதை உணர்கிறார்.

செல்லக்கனியிடம் கேட்டாள் உண்மையை மட்டும்தான் பேசுவாள் என்பதை நினைத்துப்பார்த்து அவளிடம் கேட்கிறார். நடந்த விசயத்தைக் கூற தன் தங்கைகளிடம் சில்மிசம் செய்த ரௌடிகளை அடி வெளுக்கப் போகிறார்.

ஆனால் அங்கு பக்கம் பக்கமாக டயலாக் பேசி ரௌடிகளைத் தெறித்து ஓடச் செய்கிறார்.

அண்ணா சீரியல் நேற்றைய எபிசோட் | Anna serial zee tamil Yesterday episode youtube 21 May 2023

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் மே 22, 2023 முதல் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதுதான் அண்ணா தொடரின் முதல் எபிசோட்.

அண்ணா சீரியல் நாளைய எபிசோட் | Anna serial zee tamil tomorrow episode youtube 23 May 2023

இன்னமும் கதாநாயகி அறிமுகம் ஆகவில்லை என்பதால் இரண்டாவது நாள் கதாநாயகி அறிமுகம் ஆகும் காட்சி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story