அஜித்துடன் மீண்டும் இணையும் கதாநாயகி!

அஜித் குமார் நடிக்கும் புதிய படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் புதிய படம் துவங்க இருக்கிறது என துணிவு பட வெளியீட்டின்போது தகவல் வந்தது. ஆனால் இடையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான முடிவுகளால் விக்னேஷ் சிவன் அந்த வாய்ப்பை இழந்தார். அவரையடுத்து அஜித் மகிழ்திருமேனியின் கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. வழக்கமாக ஒரு இயக்குநரைப் பிடித்துவிட்டால் 3,4 படங்களைத் தொடர்ந்து அவருக்கே பண்ணும் அஜித்குமார் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் படத்திலிருந்து தூக்கவும் தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.
மகிழ்திருமேனி மொத்தம் 2 கதைகளை அஜித்திடம் தெரிவித்திருக்கிறார். முதல் கதை காமெடி, செண்டிமென்ட், காதல் கலந்த ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம். இது கிட்டத்தட்ட வீரம் படத்தைப் போல இருக்கும். ஆனால் ஆக்ஷன் வெறுமனே இல்லாமல் அதில் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்கும் என்கிறார்கள்.
மகிழ்திருமேனி அஜித்திடம் சொல்லியிருக்கும் இரண்டாவது கதை, ஒரு ஸ்பை திரில்லர். இது கிட்டத்தட்ட துப்பாக்கி படத்தைப் போன்றது. ஆனால் நாயகனும் வில்லனும் சம பலம் பொருந்திய ஆட்கள். இதனால் மாஸ்டர் படம் மாதிரி இன்னொரு ஹீரோவுக்கு அதிக காட்சிகள் போய்விடக்கூடாது என அஜித் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
இந்நிலையில், இந்த ஸ்பை திரில்லர் கதையைத் தான் முதலில் எடுக்கப் போகிறார்களாம். மொத்தம் 3 தலைப்புகளைத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதை பதிவும் செய்து வைத்திருக்கிறார்கள். முதல் படத்துக்கு ஒரு தலைப்பை சூட்டி விட்டால், அடுத்த படத்துக்கு மிச்சம் இருக்கும் 2ல் ஒன்றை வைக்கலாம் என திட்டம் போட்டிருக்கிறார்களாம்.
அஜித்குமார் 62ல் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்யலாம் என யோசித்து வருகிறார்களாம். இந்த படத்தில் அஜித்துக்கு நிகரான ஒரு பெண் கதாபாத்திரம் அதை திரிஷாவால் நன்றாக செய்ய முடியும் என நினைக்கிறார்களாம். ஏற்கனவே மங்காத்தா படத்தில் திரிஷா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
சமீபத்தில் திரிஷா நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. ராங்கி, பரமபதம் விளையாட்டு, பேட்ட, மோகினி, நாயகி என சமீப காலங்களில் திரிஷாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக கேரக்டர்கள் அமையவில்லை. திரிஷாவின் நடிப்பில் பொன்னியின் செல்வன், 96, கொடி, என்னை அறிந்தால் என 4,5 படங்களே கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான பெயரைப் பெற்றுத் தந்தன.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் மார்க்கெட்டைக் கைப்பற்றியிருக்கிறார் திரிஷா. இன்னும் சில படங்கள் அவர் மார்க்கெட்டை விரிவடையச் செய்து நல்ல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu