/* */

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தில், அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை
X

நடிகர் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். மேலும் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

தற்போது தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஜதிரத்னலு' படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10 காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2018-ஆம் ஆண்டு வெளியான 'எடெர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஸ்பெஷல் ஆப்ஸ்' என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு இவர் ஜோடியாக நடிப்பது குறித்து அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

Updated On: 14 Feb 2022 8:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது