/* */

நடிகர் சூர்யாவின் 'விருமனி'ல் நாயகன் நடிகர் கார்த்தி..!

நடிகர் சூர்யா தயாரிக்கும் 'விருமன்' படத்தின் நாயகன் கார்த்தி. இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா மதுரையில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நடிகர் சூர்யாவின் விருமனில் நாயகன் நடிகர் கார்த்தி..!
X

நடிகர் கார்த்தி. நடிகை அதிதிசங்கர்

சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'விருமன்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

'கொம்பன்', 'மருது', 'புலிக்குத்தி பாண்டி', 'தேவராட்டம்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம்தான் 'விருமன்'. கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். அதிதி சினிமாவில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை மகன் உறவை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ள 'விருமன்' படத்தில் ராஜ்கிரண், சூரி, பிரகாஷ் ராஜ், ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். 'விருமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட்த்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தநிலையில், இசை வெளியீட்டு விழாவை அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Updated On: 29 July 2022 5:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...