Cheyyar Sipcot-1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு..! விரிவாகும் செய்யாறு சிப்காட்..!

Cheyyar Sipcot-1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு..! விரிவாகும் செய்யாறு சிப்காட்..!
X

Cheyyar Sipcot-செய்யாறு தொழிற்பூங்கா (சிப்காட்)

2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தை மிகப்பெரிய பொருளாதார மண்டலமாக உருவாக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Cheyyar Sipcot

சிப்காட், பெரிய தொழில்துறை நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகையின் கட்டமைக்கப்பட்ட தொகுப்பின் ஒப்புதல் மற்றும் விநியோகத்திற்கான தமிழ்நாடு அரசாங்கத்தின் ஒரு முக்கிய நிறுவனமாகவும் செயல்படுகிறது (தமிழ்நாடு தொழில் கொள்கை. 2021-2025). இந்த தொகுப்பு தளவாட உள்கட்டமைப்பு மீதான முத்திரை வரி சலுகைகள், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி, தொழில்நுட்ப ஜவுளி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரிபாகங்கள் உற்பத்தி, உயிரி தொழில்நுட்பம், மருந்து பொருட்கள் போன்ற சூரிய சக்தி துறைகளுக்கான சலுகைகள், குறிப்பிட்ட முதலீட்டை பூர்த்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான அனுமதிகளை எளிதாக்குகிறது.

Cheyyar Sipcot

தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மாநிலமாக உயர்த்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு மிகப்பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு Industrial Hub உருவாக்கப்பட்டு வருகிறது.


இதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு பகுதியில் இருக்கும் சிப்காட் எப்போதும் இல்லாத வகையில் தற்போது பரபரப்பாக விரிவாக்கம் அடைந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் இப்பகுதியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. செய்யாறு SIPCOT பகுதியில் 3 மாபெரும் திட்டங்கள் தயாராகி வருகின்றன.

இந்தியாவில் அதிகப்படியான ப்ரீமியம் பைக் விற்பனை செய்யும் ராயல் என்பீல்ட் நிறுவனம் சமீபத்தில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில் செய்யாறு சிப்காட் பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் புதிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தளத்தை அமைக்கும் பணிகளை ராயல் என்பீல்டு துவக்கியுள்ளது.

Cheyyar Sipcot

இதை தொடர்ந்து கிராசிம் நிறுவனம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பெயின்ட் உற்பத்தி தளத்தை அமைக்கவும், அதற்கான முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்கட்டமைப்பு, கட்டுமானம் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பெயின்ட் துறைக்கு அதிகப்படியான வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்பு உள்ளது.

இதேபோல் ஆட்டோமொபைல் துறைக்கான பேட்டரி தயாரிக்கும் அமரராஜா சமீபத்தில் தெலுங்கானாவில் பிரம்மாண்ட லித்தியம் அயன் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது செய்யாறு சிப்காட் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் புதிய உற்பத்தி தளத்தை அமைப்பதற்கான பணிகளை துவங்கியுள்ளதாக டிவிட்டரில் சென்னை அப்டேட்ஸ் தெரிவித்துள்ளது.

Cheyyar Sipcot

இதே வேளையில் தென்னிந்திய மாநிலங்களில் வலிமையான பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக 2023 ஆம் நிதியாண்டின் முடிவில் 24.8 லட்சம் கோடி ரூபாய் GSDP உடன் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது

இதேபோல் 2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் தமிழ்நாடு 87000 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்த சந்தைக் கடன் (Gross Market Borrowings) பெற்று இருக்கும் வேளையில், மூலதன விரிவாக்கத்திற்காக முதலீடு செய்யப்பட்ட தொகை 39,962.27 கோடி ரூபாயில் இருந்து 45,989.81 கோடி ரூபாயாக 2022-23 நிதியாண்டில் உயர்ந்துள்ளது.

மூலதன விரிவாக்கத்தில் அதிகரிக்கப்பட்ட 1 சதவீத தொகை மூலம் தமிழ்நாட்டின் GSDP அதாவது Gross State Domestic Product அளவு 0.82 முதல் 0.84 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என இந்தியா ரேட்டிங்க்ஸ் அண்ட் ரிசர்ச் அமைப்பின் மூத்த ஆய்வாளர் Paras Jasrai தெரிவித்துள்ளார்.

Cheyyar Sipcot


நில ஒதுக்கீட்டில் ஊக்கத்தொகை

மார்ச் 16, 2021 அன்று, SIPCOT தனது சலுகை / ஊக்குவிப்பு அடிப்படையிலான நில ஒதுக்கீடு கொள்கையை தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 உடன் இணைக்கும் சுற்றறிக்கையை வெளியிட்டது. 'A' மற்றும் 'B' இல் உள்ள திட்டங்களுக்கு SIPCOT நிலச் செலவில் 10 சதவீதத்தை ஊக்கத்தொகையாக வழங்குகிறது. மாவட்டங்கள் மற்றும் 'சி' வகை மாவட்டங்களுக்கு ஊக்கத் தொகையாக நிலச் செலவில் 50 சதவீதம்.

Cheyyar Sipcot

C வகை மாவட்டங்களில் உள்ள SIPCOT தொழில் பூங்காக்கள்

செய்யாறு கட்டம் 1 மற்றும் 2 திருவண்ணாமலை மாவட்டம்

தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 இன் கீழ் மாவட்டங்களின் வகைப்பாடு

பிரிவு A: செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்.

பிரிவு பி: கோவை, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருப்பூர் மற்றும் வேலூர்.

பிரிவு சி: அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்புலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர்.

Tags

Next Story