/* */

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு- சிலிண்டருக்கு ரூ.15 உயர்வு

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்துள்ளது.

HIGHLIGHTS

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிப்பு- சிலிண்டருக்கு ரூ.15 உயர்வு
X

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் ரூ.700க்கு விற்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, கடைசியாக, ரூ.900 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, இன்று காலை ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை நகரின் நிலவரப்படி, ஒரு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் 200 ரூபாய்க்கும் மேல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது, நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 6 Oct 2021 3:55 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...