திருச்செந்தூர் அருகே கானம் பேரூராட்சியில் திமுக வெற்றி
X
By - B.Gowri, Sub-Editor |22 Feb 2022 10:16 AM IST
திருச்செந்தூர் அருகே கானம் பேரூராட்சியில் 12 வார்டுகளில் 7 வார்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்.19ம் தேதி நடந்தது. இதில் திருச்செந்தூர் தாலுகா கானம் பேரூராட்சியில் 12 வார்டுகளுக்கு மொத்தம் 38 பேர் போட்டிட்டனர். இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் மொத்தம் உள்ள 12 வார்களில் திமுக 7 இடத்திலும், அதிமுக 4 இடங்களிலும், பாஜ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் கானம் பேரூராட்சியில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu