போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்கு மரண தண்டனை: இங்கல்ல சவுதியில்

சவுதி அரேபியாவில் கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2022-11-22 07:03 GMT

சவூதி அரேபியாவில் மரண தண்டனை

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சவுதி அரேபியாவில் கடந்த 10 நாட்களில் 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் சிலரது தலையை வாளால் துண்டிக்கப்பட்டன என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, இதில் மூன்று பாகிஸ்தானியர்கள், நான்கு சிரியர்கள், இரண்டு ஜோர்டானியர்கள் மற்றும் மூன்று சவுதிகள் அடங்குவர் என்று டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், சவூதி அரேபியா அதன் நவீன வரலாற்றில் அரசால் நடத்தப்பட்ட மிகப்பெரிய மரணதண்டனையில், கொலைகள் மற்றும் போராளிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 81 பேரை தூக்கிலிட்டது.

2018 ஆம் ஆண்டு துருக்கியில் அமெரிக்க பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரில் சவூதி கொலைக் குழுவினால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சவூதி அரேபியா அத்தகைய தண்டனைகளை குறைப்பதாக சபதம் செய்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்திய நாட்களில் புதிய மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

2018 ஆம் ஆண்டிலும், சவுதி நிர்வாகம் மரண தண்டனையை குறைக்க முயற்சித்தது. ஆனாலும் கொலை குற்றவாளிகள் மட்டுமே மரண தண்டனைக்கு உட்பட்டவர்கள்.

Tags:    

Similar News