கொரிய அதிபராக பதவியேற்ற யூன்சுக்யியோலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கொரிய குடியரசின் அதிபராக இன்று பதவியேற்ற யூன்சுக்-யியோலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Update: 2022-05-10 08:01 GMT

கொரிய குடியரசின் அதிபராக இன்று பதவியேற்ற யூன்சுக்-யியோலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: " இன்று பொறுப்பை துவங்கும் கொரிய அதிபர் சுக்-யியோல் யூனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரை விரைவில் சந்தித்து, இந்திய-கொரிய உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்". என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News