நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் விண்ணில் பாய்வதில் சிக்கல்

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஆர்ட்டெமிஸ்-1 எஸ்எல்எஸ் ராக்கெட் கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது

Update: 2022-08-29 13:10 GMT

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்காக நாசா ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப திட்டமிட்டிருந்தது.

இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்புவதாக இருந்தது. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது

இதனை தொடர்ந்து, ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதிக்க உள்ளனர்.

ஆர்ட்டெமிஸ்-1 விண்ணில் பாய்வதை காண, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு ஏமாற்றமளித்துள்ளது. 

Tags:    

Similar News