இங்கிலாந்து புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

இங்கிலாந்து புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2024-07-06 11:48 GMT
இங்கிலாந்து புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி

இந்திய பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

  • whatsapp icon

பிரதமர் மோடி பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் பேசினார், அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை தழுவியது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் லேபர் பார்ட்டி வெற்றி பெற்றதன் மூலம் அந்த கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் புதிய பிரதமராக தேர்வ] பெற்றுள்ளார்.

கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய பிரதமர் மோடி சனிக்கிழமையன்று அவருடன் தொலைபேசியில் பேசினார், அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார், மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இரு நாட்டுத் தலைவர்களும் எஃப்டிஏ ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க ஒப்புக்கொண்டனர் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டனின் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பிரித்தானியாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி 650 இடங்களில் 412 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று 14 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர் கியர் ஸ்டார்மர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அவரிடம் பேசிய பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றதற்கும், தேர்தலில் தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றதற்கும் வாழ்த்து தெரிவித்தார். உரையாடலில், இரு தலைவர்களும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை விரைவில் இறுதி செய்ய ஒப்புக்கொண்டனர். இதுதவிர, கியர் ஸ்டார்மரை இந்தியா வருமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

கெய்ர் ஸ்டார்மருடன் பேசியதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கிலாந்தின் பிரதமராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். எங்கள் இரு நாட்டு மக்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News