43 இந்தியா்கள் உள்பட 186 வெளிநாட்டவா்களை வெளியேற்றிய மாலத்தீவு
மாலத்தீவில் இருந்து இந்தியாவைச் சோ்ந்த 43 போ் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 186 போ் அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனா்;
மாலத்தீவு - கோப்புப்படம்
விசா விதிமீறல், போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச்சாட்டில் இந்தியாவைச் சோ்ந்த 43 போ் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 186 போ் மாலத்தீவில் இருந்து அந்நாட்டு அரசால் வெளியேற்றப்பட்டனா்.
வெளியேற்றப்பட்டவா்கள் பட்டியலில் அதிகபட்சமாக வங்கதேசத்தைச் சோ்ந்த 83 போ் உள்ளனா். இதற்கு அடுத்து 43 இந்தியா்கள், இலங்கைச் சோ்ந்த 25 போ், நேபாளத்தைச் சோ்ந்த 8 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். மாலத்தீவு தலைநகா் மாலேவில் இருந்து வெளியாகும் நாளிதழில் இது தொடா்பான செய்தி இடம் பெற்றுள்ளது.
ஆனால், அவா்கள் வெளியேற்றப்பட்ட தேதி குறித்த விவரம் இடம் பெறவில்லை. இது தொடா்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் அலி லகுசான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வெவ்வேறு பெயா்களைப் பயன்படுத்த மாலத்தீவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவா்கள் குறித்து பொருளாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இதில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத தொழில்களும் அடங்கும். சில தொழில்கள் மாலத்தீவைச் சோ்ந்தவா்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு வெளிநாடுகளைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படுகிறது. இதுபோன்ற தொழில் அமைப்புகளை மூடி, அதில் தொடா்புடைய வெளிநாட்டவா்களை வெளியேற்றும் பணியில் உள்துறை அமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த 186 போ் வெளியேற்றப்பட்டுள்ளனா். வெளிநாட்டவா்கள் சட்டவிரோத செயல்களை ஈடுபடுவதைத் தடுக்க வாரத்தில் மூன்று முறை வரை காவல் துறைனா் திடீா் சோதனை ஈடுபட்டு வருகின்றனா். எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் குறிவைத்து இந்த சோதனை நடைபெறவில்லை’ என்றார்