ஏப்ரல் 2ம் தேதி - இன்று சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள்
சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள் 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.;
இன்று சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள்
சர்வதேச குழந்தைகளின் புத்தக நாள் (International Children's Book Day - ICBD) 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நாளாது ஹான்ஸ் கிறிஸ்த்தியன் ஆன்டர்சன் (1805-1875) என்னும் குழந்தை இலக்கிய எழுத்தாளரின் பிறந்த நாள் ஆகும்.[1] "இளம் மக்களுக்கான புத்தகங்களின் பன்னாட்டு வாரியம்" (International Board on Books for Young People - IBBY) என்னும் பன்னாட்டு ஆதாய நோக்கற்ற அமைப்பு (International Non–Profit Organization) இந்நாளைக் கொண்டாடும் முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பன்னாட்டுக் குழந்தைகள் புத்தக நாளானது பின்வரும் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
புத்தகம் படிக்கும் விருப்பத்தை ஊக்குவித்தல்
குழந்தைகளுக்கான புத்தகங்களின் மீது கவனத்தை ஈர்த்தல்