இங்கிலாந்து நாட்டினருக்கான தனிமைப்படுத்தலை இந்தியா விலக்கிக் கொண்டது

இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் நாட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திகொள்ள வேண்டும் என்ற உத்தரவை இந்தியா விலக்கிக் கொண்டது

Update: 2021-10-15 04:36 GMT

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்க இங்கிலாந்து முன்பு மறுத்து இந்தியர்களுக்கு கட்டுப்பாடு விதித்தது. எனவே, தடுப்பூசி போடப்பட்ட இந்தியப் பயணிகள் 10 நாட்களுக்கு தங்கள் சொந்த செலவில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் நாட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கோவிட் சோதனைகளை எடுக்க வேண்டும் என இந்தியா அறிவித்திருந்தது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் இந்திய தயாரிப்பான கோவிஷீல்ட் தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரிக்காததால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. கடந்த மாதம் இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகள் கோவிஷீல்டின் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்காமல், கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.

இறுதியாக 8 அக்டோபர் அன்று,  தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இந்தியாவை இங்கிலாந்து நீக்கியது. அதனைத்தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இங்கிலாந்து தளர்த்திய சில நாட்களுக்குப் பிறகு இங்கிலாந்து நாட்டிலிருந்து வருபவர்களுக்கான தனிமைப்படுத்தலை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது.

இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை லட்சக்கணக்கான பிரிட்டன் மக்களுக்கு அளிக்கப்பட்ட போதிலும், அதை அங்கீகரிக்க இங்கிலாந்து மறுத்து வந்தது.

இந்தியாவின் முதன்மையான தடுப்பூசியான கோவிஷீல்ட், இதுவரை 720 மில்லியனுக்கும் அதிகமான அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது இங்கிலாந்து நாட்டில் பயன்படுத்தப்படும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி போன்றது.

Tags:    

Similar News