இந்தோனேசியா சிறைச்சாலையில் தீவிபத்து: 41 பேர் பலி

இந்தோனேசியாவின் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர்.

Update: 2021-09-08 14:06 GMT

இந்தோனேசியா சிறை தீவிபத்தில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க சிறையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

இன்று அதிகாலை  மின்கசிவால் அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சிறைச்சாலையில் நேரிட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News