அபுதாபியில் ட்ரோன் மூலம் வெடிகுண்டு தாக்குதல்: 2 இந்தியர்கள் பலி

அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், இரு இந்தியர்கள் உயிரிழந்தனர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-01-17 13:00 GMT

ட்ரோன் தாக்குதலில் எண்ணெய் எரிபொருள் டேங்கர்கள் எரிந்து கடும் புகை வெளியேறியது. 

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதிய கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், திடீரென ட்ரோன் மூலம், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில், ஏடிஎன்ஓசி எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான 3 எரிபொருள் டேங்கர் வெடித்து சிதறின.

இந்த கொடூர தாக்குதலில் 2 இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என, இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. மேலும், 6 பேர் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. ஈரான் ஆதரவு பெற்ற, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இந்த தாக்குதலை, உலக நாடுகள் வன்மையாக கண்டித்துள்ளன. 

Tags:    

Similar News