தைவானுக்கு அழைப்பு, எரிச்சலில் சீனா: கடுப்படித்த பைடன்

ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சிமாநாட்டிற்கு 110 நாடுகளை அழைத்துள்ள பைடன், தைவானுக்கு அழைப்பு விடுத்து சீனாவை தவிர்த்துள்ளார்

Update: 2021-11-25 05:38 GMT

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டிசம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜனநாயகம் குறித்த மெய்நிகர் உச்சி மாநாட்டிற்கு 110 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பட்டியலின் படி, சீனா, துருக்கி மற்றும் ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. துருக்கி நேட்டோவில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநாபாதுகாப்பு கவுன்சிலின் இரண்டு நிரந்தர உறுப்பினர்களுக்கு இடையிலான மோசமடைந்து வரும் உறவுகளுக்கு மத்தியில் சீனாவை எரிச்சலடையச் செய்யும் விதமாக , இந்த பட்டியல் தைவான் சேர்க்கப்பட்டுள்ளது

உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்ட அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடுகள் பட்டியலில் தெற்காசிய பிராந்தியத்தில் இருந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில், இஸ்ரேல் மற்றும் ஈராக் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அரபு நட்பு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அழைக்கப்படவில்லை.

உச்சிமாநாட்டின் கருப்பொருள் சர்வாதிகாரத்திற்கு எதிராக பாதுகாப்பு, ஊழலுக்கு எதிராக போராடுதல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களில் அர்ப்பணிப்புகளையும் முன்முயற்சிகளையும் மேம்படுத்துவதாகும்

Tags:    

Similar News