நடுவானில் தீப்பிடித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம்: அவசர தரையிறக்கம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இஞ்சின் நடுவானில் தீப்பிடித்ததையடுத்து, அவசரமாக தரையிறக்கப்பட்டது. . பறவை மீது மோதியதால் விமானம் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

Update: 2023-04-24 04:42 GMT

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இஞ்சின் நடுவானில் தீப்பிடித்தததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை ஓஹியோ விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது, விமானத்தின் இஞ்சின் மீது  பறவை மோதியதாக கூறப்படுகிறது.

"யாருக்கும் காயம் ஏற்படவில்லை, உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்குப் பிறகு ஜான் க்ளென் கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது" என்று மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் சிபிஎஸ் செய்திக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானம், போயிங் 737 கமர்ஷியல் ஜெட், ஞாயிற்றுக்கிழமை காலை 7:45 மணியளவில்  புறப்பட்ட விமானம் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு விமான நிலையத்திற்குத் திரும்பியது என்று கண்காணிப்பு தளமான FlightAware தெரிவித்துள்ளது.

ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று அப்பர் ஆர்லிங்டனுக்கு மேலே பறந்த விமானம், பறவையின் மீது மோதிய பின்னர் திருப்பி விடப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

"இன்று காலை சிஎம்ஹெச்சில் நடந்த ஒரு விமானத்தில் எஞ்சின் தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்ட விமானச் சம்பவத்திற்கு அவசரக் குழுவினர் விரைந்து வந்தனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் விமான நிலையம் திறக்கப்பட்டு இயங்குகிறது" என்று விமான நிலைய அதிகாரிகள் ட்வீட்டில் கூறியுள்ளனர்


Tags:    

Similar News