வங்கதேசத்தில் ரயில்கள் மோதி விபத்து: 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு நகரமான பைரப்பில் நடந்த விபத்தில், சரக்கு ரயில் எதிர்திசையில் பயணித்த பயணிகள் ரயிலின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டன;
பங்களாதேஷ் ரயில் விபத்து
பங்களாதேஷில் திங்களன்று இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 பேர் காயமடைந்துள்ளனர், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
கிழக்கு நகரமான பைரப்பில் நடந்த விபத்தில், சரக்கு ரயில் எதிர்திசையில் பயணித்த பயணிகள் ரயிலின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்காளதேச நாட்டின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை புறப்பட்டது. பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக டிராக் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மெல்ல மாறிக்கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் வேகமாக வந்தது. எக்ஸ்பிரஸ் ரயில் முழுமையாக மாற்று தண்டவாளத்திற்கு செல்வதற்கு முன் அதில் சரக்கு ரயில் வந்தது.
இதில், எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
ரயில் விபத்துக்கள் வங்காளதேசத்தில் பொதுவானவை மற்றும் அவை பெரும்பாலும் மோசமான சிக்னல், அலட்சியம், பழைய தடங்கள் அல்லது பிற சரிவு உள்கட்டமைப்பு ஆகியவற்றால் ஏற்படுகின்றன.