அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் ரஷ்யா போர் தொடுத்திருக்காது

உக்ரைனை நேட்டோவில் சேர்க்கமாட்டோம் என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் ரஷ்யா போர் தொடுத்திருக்காது

Update: 2022-02-26 03:02 GMT

இது உக்ரைன் மேப், இதில் நீலத்தில் இருப்பது கிழக்கு உக்ரெய்ன். நீல நிறத்தில் இருப்பது பூர்வகுடி ரஷ்யர்கள் வசிக்கும் டோனபாஸ் பகுதி. ஆரஞ்சு நிறத்தில் இருப்பது உக்ரேனியர்கள் வசிக்கும் பகுதியாகும். 1945ல் ஒரே நாடாக சோவியத் யூனியன் இருந்தபோது "நாம் எல்லாரும் சோவியத் குடிமக்கள், உக்ரைனியர்கள், ரஷ்யர்கள் அல்ல" என பரந்தமனபான்மையுடன் மொழி பாகுபாடு பார்க்காமல் மாநிலங்களை பிரித்தார்கள்.

1991ல் சோவியத் யூனியன் உடைந்தபோது பழைய மாநில எல்லைகளை வைத்து கொண்டே உக்ரைன் பிரிந்தது. ரஷ்யாவுடன் இணக்கமாக இருந்தவரை ரஷ்யா கண்டுகொள்ளவில்லை. ஆனால் உக்ரைனில் ரஷ்யர்களுக்கும், உக்ரைனியர்களுக்கும் பெருத்த அடிதடி, சண்டை இருந்து வந்தது. 2014ல் இருந்து இன்று வரை நடந்த போரில் 14 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். நேட்டோவிலும் சேருவதாக உக்ரைன் சொல்லிவர புடின் படை எடுத்துவிட்டார். உக்ரைன் தலைநகர் கீவை பிடித்து பூர்வகுடி ரஷ்யர்கள் இருக்கும் பகுதியை ரஷ்யாவுடன் இணைத்து, நேட்டோவில் சேரமாட்டோம் என வாக்குறுதியை பெற்று போர் முடிவடையும்.

உக்ரைன் நேட்டோவில் சேர்ந்தால் கீவில் அமெரிக்க ராணுவம் நிறுத்தபட்டு ஐந்தே நிமிடத்தில் மாஸ்கோவை ஏவுகணை தாக்க முடியும். 1962ல் கியூபாவில் ரஷ்யா ஏவுகணைகளை நிறுவ முயல்கையில் அமெரிக்கா தாம், தூம் என குதித்து கியூபன் மிஸைல் கிரைசிஸை உருவாக்கியது. இப்போது கனடாவில் ரஷ்யா ஏவுகணைகளை நிறுவினால் அமெரிக்கா சும்மா இருக்குமா? உக்ரைனை நேட்டோவில் சேர்க்கமாட்டோம் என்று அமெரிக்கா வாக்குறுதி கொடுத்திருந்தால் இந்த போர் நடந்திருக்காது. உக்ரைன் சோவியத் ரஷ்யா ஆட்சியில் பல கொடுமைகளை அனுபவித்த நாடு. எல்லை பிரச்னையையும், நேட்டோ பிரச்னையையும் பேசி தீர்த்து இருக்கலாம். பாவம் உக்ரைன் மக்கள்.

Tags:    

Similar News