இலங்கையில் அல் குவைதா தலிபானுடன் தொடர்பா !

Update: 2021-03-20 10:15 GMT

சர்வதேச தீவிரவாத அமைப்புக்களான அல் குவைதா மற்றும் தலிபான் உள்ளிட்டவைகளுடன் தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் மற்றுமொரு அமைப்பு பற்றிய விசாரணைகளை புலனாய்வுத்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இஸ்லாமிக் ரிலிஜ் ஏஜன்ஸி எனப்படும் இந்த அமைப்பு, கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்டு தற்போதும் இயங்கிக் கொண்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையில், கத்தார், சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு அமைப்புக்களிடம் இருந்தும் சுமார் 24 கோடி ரூபா நிதி குறித்த அமைப்பிற்குக் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த தகவல்களை  இலங்கை  ஊடகம் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News