தாய்லாந்து பிரதமருக்கு கோவிட் -19 தடுப்பூசி

Update: 2021-03-16 07:30 GMT

 அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியை தாய்லாந்தின் பிரதம மந்திரிக்கு செலுத்தப்பட்டது. ஐரோப்பாவில் சில நபர்களில் இரத்த உறைவு பற்றிய அறிக்கைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

ஆஸ்திரேலியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் தென் கொரியாவில் இந்த ஆண்டு மேலும் நூற்றுக்கணக்கான மில்லியன் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அஸ்ட்ராஜெனெகா  முதல் தடுப்பூசியை செலுத்தப்பட்ட பிறகு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சா பின்வருமாறு கூறினார்.

நாங்கள் மருத்துவர்களை நம்ப வேண்டும், எங்கள் மருத்துவ நிபுணர்களை நம்ப வேண்டும். என்றார். தாய்லாந்தின் சுகாதார அதிகாரிகள் அஸ்ட்ராசெனெகாவுடன் முன்னேற முடிவு செய்தனர், பிரயுத் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் முதல் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தப்பட்டது .

அஸ்ட்ராஜெனெகா ஆசியாவில் ஒரு உற்பத்தித் தளத்தை உருவாக்கியுள்ளது, மேலும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு பில்லியன் அளவிலான தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News