குவாரி தண்ணீரில் தவறி விழுந்து இளைஞர் பலி

Update: 2021-03-26 11:15 GMT

ஆண்டிபட்டி அருகே கல்குவாரியில் தேங்கிய தண்ணீரில் தவறி விழுந்த பெயிண்டர் பலியானார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ்(27). பெயிண்டர். இவர் தனது நண்பர்களுடன் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான செயல்படாத குவாரி பகுதியில் நடந்து சென்ற போது கால் தவறி, கல்குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் கானா விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு சத்யராஜ் பிணமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கானா விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News