அனைத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி

Update: 2021-04-09 10:00 GMT

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் 2ம் அலை எதிரொலியாக நாளை முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தமிழக அரசு சார்பில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் மதுரை, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகளிலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.மேலும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டும், பயணிகள் பேருந்து பயணத்தின் போது போதிய விழிப்புணர்வு கொண்டும், கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து இன்று பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளதை அடுத்து, பெரும்பாலான பேருந்துகளில் குறைந்த அளவிலேயே பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பயணிகளுக்கு மாஸ்க் மற்றும் கைகளை சுத்தம் செய்வது போன்ற கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News