நீட் மற்றும் 7 தமிழர் விடுதலையில் முதல்வர் வெற்றியுடன் திரும்புவார்: செல்லூர் ராஜு

நீட் மற்றும் 7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்றியுடன் திரும்புவார் என நம்புவதாக செல்லூர் ராஜு பேட்டி

Update: 2021-06-17 07:45 GMT

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க  முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு அளித்தார்

மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க கோரி முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் தனது கட்சியினருடன் வந்து கோரிக்கை மனு அளித்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது ,

மதுரை மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க ஆணையரிடம் மனு அளித்து இருக்கின்றேன்.  மேலும் பணி முடிக்கப்பட்ட திட்டங்களை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்திருக்கிறோம். தொற்றை திமுக கட்டுப்படுத்தவில்லை, இந்திய அளவில் தொற்று இரண்டாவது அலை வேகத்தை குறைத்து உள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த போது டாஸ்மாக் திறப்பிற்கு எதிராக பேசியவர் , தற்போது ஆதரவாக பேசுகின்றார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும் என கூறினர் அதனை தற்போது அவர்கள் செய்வார்களா என மக்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்

கூட்டுறவுத் துறை தொடர்பாக நேருக்கு நேர் அமர்ந்து விவாதிக்க நான் தயார் ஐ.பெரியசாமி தயாரா என கேள்வி எழுப்பினார்

கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டோம் என்று திமுக பெருமை பேசி வருகின்றனர். இறப்பு மகாராஷ்ட்ரா விட தமிழகத்தில் அதிகம் இருக்கிறது. அதிமுக போல திமுக செயல்படவில்லை என்று கூறினார்

நீட் தேர்வை ரத்து செய்து 7 தமிழர் விடுதலையை உறுதி செய்து வெற்றி உடன் திரும்பி வருவார் என்று நம்புவதாக கூறினார்

 சசிகலாவை பற்றி கேட்ட கேள்விக்கு தமிழகத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை பேசுங்கள் என்று கூறினார்.

Tags:    

Similar News