பொதுமக்கள் தாகம் தணிக்க நீர்,மோர் பந்தல் திறப்பு

Update: 2021-04-15 10:15 GMT

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோடை வெயிலை தணிக்க பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

கொளுத்தும் கொடை வெயிலில் மக்களின் தாகம் தீர்க்க மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பனகல்சாலை கட்சி அலுவலகம் முன் அதிமுக நீர், மோர் பந்தலை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார். உடன் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், பொருளாளர் ராஜா, அண்ணாதுரை ,குமார் உள்ளிட்ட அதிமுக அனைத்து நிர்வாகிகள் தொண்டர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News