சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த விருதுநகரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

Update: 2021-12-15 16:30 GMT

பைல் படம்.

விருதுநகர் ஓட்டன குலத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 26. இவர் மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார் .திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணை ஏமாற்றி தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் வினோத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News