மழையால் பனையூர் அய்யனார் கோவில் மண்டபம் இடிந்து சேதம்

தொடர் மழையால், மதுரை பனையூர் அய்யனார் கோவில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

Update: 2021-11-30 11:30 GMT

 தொடர் மழையால் இடிந்து விழுந்த, பனையூர் அய்யனார் கோவில் மண்டபம்.

மதுரை பனையூர் கிராமத்தில்,  சபரிமலை சாஸ்தா கோவில் உள்ளது. பழைமை வாய்ந்த இக்கோவிலில், கடந்த 2001 ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டு,  கோவில் பொதுமக்களின்  பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது பெய்து வரும் தொடர் மழையில்,  இன்று காலை கோவிலில் உள்ள திருமண மண்டபம் இடிந்து முற்றிலும் சேதமானது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள், அப்பகுதியை  ஆய்வு செய்து கட்டிடத்தில் இருந்து இடிந்த பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.  அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தினால், எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News