அரசு லேப் டெக்னீசியன்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் லேப் டெக்னீசியன்களை நிரந்தரப் பணியாளர்களாக்க கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2021-12-09 00:00 GMT

பைல் படம்

மதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் இதுவரை மாதம் ரூ 8 ஆயிரத்திற்கு பணி செய்து வரும்  தங்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டுமென  லேப் டெக்னீசியன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1136 லேப் டெக்னீசியன்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்ப சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக பணி செய்துவரும் லேப் டெக்னீசியன்கள் காலியாக இருக்கும் பணியிடங்களில் நிரந்தர பணியாளராக மாற்றம் செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News