திருமங்கலம் அருகே கருப்பசாமி கோவில் விழாவில் பக்தர்களுக்கு பிரியாணி

திருமங்கலம் அருகே கள்ளிக்குடி சூலக்கரை கருப்பசாமி கோவில் விழாவில் பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

Update: 2021-10-20 03:11 GMT
மதுரை ஆருகே கள்ளிக்குடி சூலக்கரை கருப்பசாமி கோயில் விழாவில் பக்தர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி பகுதியில் அமைந்துள்ள சூலக்கரை கருப்பசாமி கோவில் ஆறாம் வருட திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  திருவிழாவினை கள்ளிகுடி தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் சூரி சுரேஷ்  தலைமை தாங்கி  நடத்தி வைத்தார்.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு 50க்கும் மேற்பட்ட கிடாவெட்டி பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சூலக்கரை கருப்பசாமியை வணங்கி பிரியாணி பிரசாதம் பெற்று சென்றனர்.


Tags:    

Similar News