தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

தெற்கு ரயில்வே சார்பில் கூடுதல் சிறப்பு ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கப்பட இருக்கின்றன

Update: 2021-06-18 12:00 GMT

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் தற்போது வெளியூர் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் மேலும் சில சிறப்பு ரயில்கள் ஜூன் 20 முதல் இயக்கப்பட இருக்கின்றன.

அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மற்றும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர சிறப்பு ரயில், திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா சிறப்பு ரயில், மதுரை - புனலூர் சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 20 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன.

அதை போல கொல்லம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், தஞ்சாவூர் மெயின் லைன் வழியாக இயக்கப்படும் எனவும், ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர சிறப்பு ரயில், மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில், புனலூர் - மதுரை சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 21 முதல் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன எனவும் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News