அதிமுகவில் ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கிறார்கள்- கிரம்மர்சுரேஷ்

Update: 2021-03-20 04:15 GMT

அதிமுகவில் ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது என அதிமுக மாநில நிர்வாகி கிரம்மர் சுரேஷ் கூறினார்.

மதுரை மத்தி தொகுதியில் அதிமுக சார்பில் அதன் தோழமை கட்சியான பசும்பொன் தேசிய கழகத்திற்கு ஒதுக்கீடு செய்து வேட்பாளராக ஜோதி முத்துராமலிங்கம் என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி கிரம்மர் சுரேஷ் அதிமுகவில் விருப்ப மனு அளித்த நிலையில் அதிமுகவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் இன்று சுயேட்சையாக போட்டியிடுவதற்காக மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுகவில் எத்தனையோ தொண்டர்கள் உள்ள நிலையில் அதிமுக தொண்டரை வேட்பாளராக அறிவிக்க முடியாத காரணம் என்ன? அதிமுகவின் தலைமையின் செயலை உணர்த்தும் வகையில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் சேர்ந்து முடிவு எடுக்கிறார்களா? ஆளுக்கு ஒரு முடிவு எடுக்கிறார்களா என்ற சந்தேகம் உள்ளது, கையில் கட்சிகொடியை பிடிக்காத நபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

உண்மையாக உழைப்பவர்களை அடையாளம் கண்டு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.தலைமை பதவியில் உள்ளவர்களின் ஆதரவாளர்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. தலைமையின் ஆதரவை எப்படி பெறுவது என்பது தெரியவில்லை.உயிரை துச்சமென கருதி பணி ஆற்றினேன், அதிமுகவில் இருந்து வெளியேறி விட்டேன் எனவும் மக்களை நம்பி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. மக்களுக்காக உயிரை கொடுப்பேன். நான் வெற்றி பெற்றால் வீட்டில் ஒரு எம்.எல்.ஏ இருப்பார். அந்த எம்எல்ஏ நானாக இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன் என்றார்.

Tags:    

Similar News