உலக தடகள சாம்பியன்ஷிப் 2022 : ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ்

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நுழைந்தனர்;

Update: 2022-07-22 04:10 GMT

ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ்

உலக தடகள சாம்பியன்ஷிப் 2022 ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு 88.39 மீட்டர் தூரம் எறிந்து அசத்தினார்.

ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் நுழைந்தனர். ஒரே இறுதிப் போட்டியில் இரு இந்தியர்கள் இரு இந்தியர்கள் இணைந்து விளையாடுவது இதுவே முதல் முறை.

ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), ரோஹித் யாதவ் (ஈட்டி எறிதல்), எல்தோஸ் பால் (டிரிபிள் ஜம்ப்), அவினாஷ் சேப்லே (ஸ்டீபிள் சேஸ்) மற்றும் அன்னு ராணி (ஈட்டி எறிதல்) ஆகியோர் உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டியதன் மூலம், இதுவே இப்போது இந்தியாவின் சிறந்த போட்டியாகும்.

உலக சாம்பியன்ஷிப்பில். ஸ்ரீசங்கர்இறுதிப் போட்டியில் பதக்கத்தை தவறவிட்டார், இப்போது மீதமுள்ள ஐந்து பேர் பதக்கங்களைப் பெறலாம். 

Similar News