South Africa New Captain தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் கேப்டன்:பவுமா, ரபாடாவுக்கு ஓய்வு
South Africa New Captain இந்தியாவுடன் மோத உள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கு கேப்டனாக மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் பவுமாமற்றும்ரபாடாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.;
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம். (கோப்பு படம்)
South Africa New Captain
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டி தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு மார்க்ரம் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டியில் மோதியது. இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3 வது போட்டியில் மேக்ஸ்வெலின் அதிரடியால் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 4 வது போட்டி மற்றும் 5 வதுஇறுதிப்போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5 க்கு 4 போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
இந்நிலையில் வரும் டிசம்பர் 10 ந்தேதி முதல் தென்ஆப்பிரிக்க அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக இந்திய அணிவீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு செல்கின்றனர். முன்று டி 20 போட்டிமற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதுகிறது.
முதலில் டி20 தொடர் நடக்கிறது. டிசம்பர் 10 ந்தேதியன்று டர்பனில் முதல் போட்டியானது நடக்கிறது. ஒரு நாள் தொடரானது 17ந்தேதியன்று ஜோகன்ஸ்பர்க்கில் துவங்க உள்ளது. இதற்கான இந்திய டி20 அணி ரெகுலர் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா கணுக்காலில் காயம் காரணமாக ஓய்வில் உள்ளதால் இந்த போட்டியிலும் சூர்யகுமார் யாதவே கேப்டனாக தொடர்வார் .
இதேபோல் தென்ஆப்பிரிக்க அணியிலும் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் தென்ஆப்பிரிக்கா அணியின் ரெகுலர்கேப்டன் பவுமா ,வேகப்பந்து வீச்சாளர் ரபாடாவுக்கு ஒரு நாள் டி20 அணி தொடருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் பவுமா செயல்பாடு மோசமாக இருந்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பவுமாவுக்கு பதிலாக கேப்டனாக மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். ஜான் சென் கோயட்சீ இருவரும் டி20 போட்டியில் மட்டும் பங்கேற்பார்கள். திரிஸ்டியன் ஸ்டப்ஸ் முதன் முறையாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
டி20 அணி வீரர்கள் விபரம்
மார்க்ரம் (கேப்டன்),பிரீ்ட்ஸ்கே, ஸ்டப்ஸ், ஹென்ரிக்ஸ், மில்லர், கிளாசன், பர்கெர், ஜான்சன், பெரைய்ரா, கோயட்சீ, பெலுக்வோயோ, ஷம்சி, மஹராஜ், வில்லியம்ஸ், லுங்கிடி, பார்ட்மென்.
ஒரு நாள் அணிக்கு
மார்க்ரம் (கேப்டன்),டோனி ஜோர்ஜி, மில்லர், பர்கெர், மல்டர், மிக்லாலி, ரிக்ஸ், துசென், வெர்ரேன், பெலுக்வாயோ, மஹராஜ், ஷம்சி, வில்லியம்ஸ், பார்ட்மென்.
டெஸ்ட் அணி
பவுமா(கேப்டன்),மஹராஜ், எல்கர், மார்க்ரம், டோனி ஜோர்ஜி, பீட்டர்சன், வெர்ரேன், ஸ்டப்ஸ், பெடிங்ஹாம், மல்டர் ஜான்சன், பர்கெர், கோயட்சீ, ரபாடா, லுங்கிடி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியுடன் மோதி டி20 தொடரைக் கைப்பற்றி கோப்பையை வென்றது இந்திய அணி. அதேபோல் தென்ஆப்பிரிக்காவிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. இனி வரவுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியானது சாதனை படைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.