இங்கிலாந்து vs இந்தியா: ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா சாதனை

Today Sports News in Tamil - ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா எடுத்த 222 ரன்கள் இங்கிலாந்தில் ஆறாவது விக்கெட்டுக்கு இந்தியாவின் அதிகபட்சமாகும்

Update: 2022-07-02 04:50 GMT

Today Sports News in Tamil -எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் 222 ரன்கள் பார்ட்னர்ஷிப்பின் மூலம் இந்தியா மீண்டது.

பர்மிங்காமில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில், முதலில் ஆடத்துவங்கிய இந்திய அணி, 28வது ஓவரின் முடிவில் 98/5 என்று இருந்தது. ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சில் இந்தியா தடுமாறியது.

இருப்பினும் ஆறாவது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த பந்த் வேகப்பந்து வீச்சாளர்களைத் தாக்கத் தொடங்கினார்,இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்தனர், இது ஆறாவது விக்கெட்டுக்கு இங்கிலாந்தில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் நான்காவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக திலீப் வெங்சர்க்கார் மற்றும் ரவி சாஸ்திரி ஜோடி 298* ரன்கள் எடுத்ததேஅதிகபட்ச பார்ட்னர்ஷிப் சாதனையாக உள்ளது. ரிஷப் பந்த் 111 பந்துகளில் 146 ரன்கள் எடுத்திருந்தார்.

ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி பேட்டிங்கில் இந்தியா 338/7 என்ற நிலையில் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்குகிறது. மழை ஒரு பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News