World Test Championship தொடரில் இந்திய தோற்க காரணம் இவைதானா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை இந்தியா இழக்க இவைதான் காரணம்!;
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. சரியான திட்டமிடல் இல்லாததால் படுதோல்வியடைந்து 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் தவிக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. இந்தியாவின் இந்த தோல்விக்கான 5 காரணங்களை இப்போது பார்க்கலாம்.
லண்டனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக கூறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் அபாரமான ஆட்டம் ஆடி சதம் அடித்தனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை ஆடியது.
டாப் வரிசை வீரர்களில் முதிர்ச்சியற்ற ஆட்டத்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி, ரஹானே 89 ரன்கள், ஷர்துல் 51 ரன்கள் எடுக்க ஆறுதலாக 296 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்களை வேகமாக எடுத்து 4ம் நாள் ஆட்டத்தில் டிக்ளேர் கொடுத்தது. இதனையடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் துவங்கியது. 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, குறைந்தபட்சம் டிரா செய்யவாவது முயற்சி செய்யும் என பார்த்தால் கடைசி நாளான இன்று கடகட என விக்கெட்டுகளை இழக்க, 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையைத் தவறவிட்டது.
Why India lost against australia in WTC 2023
1 அஸ்வின் இல்லாதது
இந்தியாவின் இந்த தோல்விக்கு காரணமாக அதிகம் பேர் சொல்வது அஸ்வினை அணியில் எடுக்காததுதான்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் அஸ்வின்.
2 ஐபிஎல்
ஓய்வின்றி உழைக்கும் வீரர்கள் கடந்த 2 மாதங்களுக்கும் அதிகமாக ஐபிஎல் போட்டிகளில் ஆடி வந்தனர். ஐபிஎல் தொடர் முடிந்து 1 வாரம் மட்டுமே ஓய்வு இருந்த நிலையில் அடுத்து உடனடியாக ஐசிசி தொடரில் ஆட வந்ததால் ஓய்வு இல்லாமல் அணி வீரர்கள் சரியாக செய்லபடமுடியவில்லை.
3 புஜாராவின் சொதப்பல் ஆட்டம்
புஜாராவை அணியில் எடுத்ததே தவறு என பலரும் பேசி வருகின்றனர். அவர் கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தில் பயிற்சி எடுத்து வரும் நிலையில் இப்படி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
4 கேப்டன்சி சரியில்லை
தோனி, கோலி போல ரோஹித் பவுலர்களை என்கரேஜ் செய்யவில்லை எனவும், அவர் ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார் எனவும் பலர் கருத்து கூறியுள்ளனர்.
5 டாஸ்
டாஸ் வென்றதும் பேட்டிங் எடுக்காமல் ஃபீல்டிங் எடுத்தது தவறான முடிவாக கூறப்படுகிறது.