மளமளவென சரிந்த பாகிஸ்தான்..! இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு...!
பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இந்தியா வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு.;
உலக கோப்பை 2023 தொடரின் இன்றைய இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் உலக கோப்பை தொடரின் முக்கியமான ஆட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 2 மணிக்கு துவங்கி இருக்கிறது. பாலிவுட் நட்சத்திரங்களான அர்ஜித் சிங், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் இசை விருந்து ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்திய முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள், சச்சின் தெண்டுல்கர், அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இப்போட்டியை நேரில் கண்டுகளிக்க இருப்பதாக கூறப்பட்டது.
முன்னதாக உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என்று தெரிந்தபோது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக தொடக்கவிழா நடக்கும் என நினைத்தால், புஷ்ஷென்று ஒரு வெண்கல கிண்ணம் கூட கிடையாது என்பது போல ஓபனிங் செர்மணியை ரத்து செய்துவிட்டது பிசிசிஐ.
இந்தியா vs பாகிஸ்தான்: கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டி
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14 ஆம் தேதியான இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதி வருகின்றன. இந்தியா பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஹாட்ஸ்டாரில் 2.5 கோடி பேர் தற்போது பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
டாஸ் வெற்றி
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று, முதலில் பந்துவீச இருப்பதாக அறிவித்தார். இதனால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய நுழைந்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா ஷபீக், இமாம் உல் ஹக் இருவரும் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் இருவரும். 7 ஓவர்கள் வரை விக்கெட் எதுவும் இழக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 8வது ஓவரில் பிரிந்தது. அப்துல்லா ஷபீக் 24 பந்துகளைச் சந்தித்து 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினார். அடுத்து இமாம் உல் ஹக் 38 பந்துகளைச் சந்தித்திருந்தபோது 36 ரன்களில் அவுட் ஆகினார்.
அடுத்து பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அசுர வேகத்துக்கு ஈடு கொடுத்து ஆடினர். இருவரும் அரை சதத்தை நெருங்கி வந்தனர்.
30வது ஓவர் வரை தாக்குபிடித்தவர்கள், அந்த ஓவரின் 4வது பந்தில் பாபர் அசாமின் விக்கெட்டை இழந்ததுடன் பிரிந்தது. அடுத்து 33வது ஓவர் முதல் 43வது ஓவருக்குள் மீதமுள்ள 8 விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றமளித்தது பாகிஸ்தான் அணி. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பும்ரா, சிராஜ், பாண்டியா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
முந்தைய போட்டிகள்
இந்தியாவும் பாகிஸ்தானும் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் மொத்தம் 200 போட்டிகளில் விளையாடியுள்ளன, இதில் இந்தியா 120 வெற்றியும், பாகிஸ்தான் 77 வெற்றியும் பெற்றுள்ளன. கிரிக்கெட் உலகக் கோப்பையில், இந்தியாவும் பாகிஸ்தானும் ஏழு முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன, ஏழு போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.
அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் 130,000 பார்வையாளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாகும். நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளமாகவும், நல்ல பவுன்ஸ் மற்றும் வேகத்துடனும் உள்ளது. இருப்பினும், ஆடுகளம் மெதுவாகவும் பின்னர் ஆட்டத்தில் திரும்பவும் முடியும்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா
சுப்மன் கில்
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர்
கேஎல் ராகுல்
ஹர்திக் பாண்டியா
ரவிந்திர ஜடேஜா
ஷர்துல் தாகூர்
குல்தீப் யாதவ்
ஜஸ்பிரித் பும்ரா
முகமது சிராஜ்
பாகிஸ்தான் அணி:
அப்துல்லா ஷபீக்
இமாம் உல் ஹக்
பாபர் அசாம்
முகமது ரிஸ்வான்
சவுத் ஷகீல்
இப்திகார் அகமது
சதாப் கான்
ஷஹீன் ஷா அப்ரிடி
ஹரிஸ் ரவூப்
ஹசன் அலி
முகமது நவாஸ்
இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற விரும்புகிறது, ஆனால் பாகிஸ்தான் எப்போதும் ஆபத்தான எதிரியாகவே உள்ளது. காகிதத்தில் இந்தியா ஒரு சிறந்த அணியைக் கொண்டுள்ளது, மேலும் அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுவார்கள். இருப்பினும், பாகிஸ்தான் சந்தர்ப்பத்திற்கு உயரக்கூடிய ஒரு அணியாகும், மேலும் அவர்கள் முரண்பாடுகளை சீர்குலைக்க பார்க்கிறார்கள்.
இந்தப் போட்டியில் இந்தியா குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணிக்கிறேன்.