எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா விலகல்: ஜஸ்பிரித் பும்ரா கேப்டன்

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா விலகல்

Update: 2022-06-29 13:03 GMT

IND vs ENG LIVE 5 வது டெஸ்ட் இந்தியாவிற்கு ஒரு பெரிய பின்னடைவாக, எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் 5 வது டெஸ்டில் ரோஹித் சர்மா விலகுவார் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவிட் -19 இலிருந்து மீளத் தவறியதால், ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா விலகப் போகிறார். 

அவர் இல்லாத பட்சத்தில், முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்தியாவை வழிநடத்தலாம் என்று பேச்சுக்கள் நடந்தன. ஆனால் தொடரை தீர்மானிக்கும் டெஸ்டில் இந்தியாவை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்துவார் என தேர்வாளர்கள் முடிவெடுத்தனர்.

கபில் தேவுக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இந்திய அணிக்கு டெஸ்டில் தலைமை தாங்குவது இதுவே முதல் முறை

Tags:    

Similar News