கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் மட்டும் இலவச சிற்றுந்து வசதி

சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் இலவச சிற்றுந்து சேவை வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2023-03-21 11:49 GMT

பைல் படம்.

சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் இலவச சிற்றுந்து சேவை வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இலவச சிற்றுந்து வசதியை இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இலவச சிற்றுந்து சேவை நாளை 11:00 மணி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது . இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

22-03-2023, அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ இரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News