காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: ஸ்ரீகாந்த், சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்; குத்துச்சண்டையில் அமித்திற்கு பதக்கம் உறுதி

Update: 2022-08-04 11:46 GMT

பேட்மிண்டன், ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 16வது சுற்றுக்குள் நுழைந்தார். ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-9, 21-9 என்ற கணக்கில் டேனியல் வாங்கலியாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறினார்

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மாலதீவின் பாத்திமத் நபாஹாவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் 48 கிலோ-51 கிலோவுக்கு மேல் (பிளைவெயிட்) பிரிவில் ஸ்காட்லாந்தின் லெனான் முல்லிகனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அமித் பங்கால் இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்தார்.


பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவை 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சோனால் 3-1 என்ற கணக்கில் நைஜீரியாவின் ஒபியோரா வை தோற்கடித்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

தடகளம், பெண்களுக்கான ஹாமர் எறிதல் போட்டியில் மஞ்சு பாலா 59.68 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

Tags:    

Similar News