ஐபிஎல் போட்டிகளில் புவனேஷ்வர் குமார் மகத்தான சாதனை

1400 டாட் பால்களை வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பெற்றார்.

Update: 2022-05-19 13:46 GMT

புவனேஷ்குமார்

இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 சீசனில் புவனேஷ்வர் குமார் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 1,400 டாட் பால்களை வீசிய ஒரே பந்துவீச்சாளர் என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்  புவனேஷ்வர் குமார் பெற்றுள்ளார். இந்த சாதனையை படைத்த ஒரே பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தான். 

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான கடைசி ஓவரில் அவர் ஒரு மெய்டன் ஓவர் வீசி ஒரு விக்கெட் எடுத்து ஐபிஎல்லில் ஹைதராபாத் அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.இந்த ஐபிஎல் தொடரில் புவனேஷ்வர் குமார் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்


இந்தியன் பிரீமியர் லீக்கில் சிறந்த ஜாம்பவான் குமார், ஐபிஎல் 2022 போட்டிகளில் பவர்பிளேயின் ஆரம்ப கட்டங்களில் அவர் சிக்கனமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆட்டத்தின் பிற்பகுதியிலும் அபாரமான செயல்திறனைக் காட்டினார், போட்டிகளின் இறுதி ஓவரில் ஸ்கோரைக் கட்டுப்படுத்தினார்.

Tags:    

Similar News