ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை

கொரோனா பரவலை கவனத்தில் கொண்டு, இங்கிலாந்தில், ரசிகர்களுடன் செல்பி எடுக்கக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு பி.சி.சி.ஐ அதிரடியாக தடை விதித்துள்ளது.

Update: 2022-06-28 13:58 GMT

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அவசியமாகிறது. கொரோனா அலையால் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1ம் தேதி தொடங்குகிறது.டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இந்த பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இதற்கிடையில், போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் பொது இடங்களில் சுற்றி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு ரசிகர்களுடன் செல்பி எடுப்பதற்கு பி.சி.சி.ஐ கண்டனம் தெரிவித்துள்ளது.இதுபோல ரசிகர்களுடன் செல்பி எடுக்கக்கூடாது எனவும், மேலும் அத்தியாவசியமாக இருந்தால் மட்டும் வீரர்கள் வெளியே செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.

Tags:    

Similar News