ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று துவக்கம் நாளை இந்தியா-பாகிஸ்தான் மோதல்
asisan cup series india vs pakistan ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று துவங்கியுள்ளது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் இலங்கை மோதுகிறது. நாளை இந்தியா - பாகிஸ்தானுடன் மோத உள்ளது.;
துபாய்:ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்கியது. இந்திய அணி இந்த தொடரில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால் 8 வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைக்கும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படுவதுதான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி. இப்போட்டியானது 15 வது சீசன்டி20தொடராக இன்று எமிரேட்சில்துவங்குகிறது. பாகிஸ்தான், இலங்கை ,இந்தியா , ஆப்கானிஸ்தான், உட்பட ஆறு அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.
கோப்பையை வெல்லுமாஇந்தியா?
இத்தொடரில் ஏழு முறையில் கோப்பையை வென்ற இந்தியா இந்த முறையும் வெற்றி பெற்றால் எட்டாவது முறையாக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா இந்த முறையும் கோப்பையை வெல்லுமா? ஒவ்வொரு அணிகளும் தங்களது உலக கோப்பை அணியை முடிவு செய்ய இத்தொடர் உதவியாக இருப்பது உறுதி. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை உலக கோப்பை நடக்க உள்ளது.
உலக கோப்பைக்கு அச்சாரம்
அடுத்த மாதம் செப்.15ல் உலக கோப்பைக்கான இந்திய அணியானது அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில்இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவர்கள் உலக கோப்பை அணியில் சேர்க்கப்படுவர்.துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித்மற்றும் கேஎல்ராகுல் இறங்க உள்ளனர்.
அதிரடிக்கு விராட் கோலி உள்ளதால் ரன் மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹீடா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார், ஜடேஜா, ஆகியோர் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சினை பொறுத்தவரை புவனேஷ்குமார், அர்ஷ்தீப் சிங், ஆகியோர் உள்ளதால் சிறப்பான பந்து வீச்சு நாளைய மேட்சில் எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ஜடேஜா, சகால் ஆகியோர் விக்கெட்டை வீ்ழ்த்த வாய்ப்பு அதிகம் உள்ளது. நாளை இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம வைரியான பாகிஸ்தானை எதிர்நோக்குகிறது.
முன்னாள் சாம்பியன்
ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை (1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதனையடுத்து இலங்கை 5 (1986, 1997, 2004, 2008, 2014), பாகிஸ்தான் 2 (2000, 2012) அணிகள் மட்டுமே கோப்பை வென்றுள்ளன.
வங்கதேச அணி 3 முறை (2012, 2016, 2018) பைனல் வரை சென்றது.
ஆப்கானிஸ்தான் ஒரு முறை (2018) 'சூப்பர்-4' சுற்று வரை சென்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2004, 2008, 2016), ஹாங்காங் (2004, 2008, 2018) அணிகள் தலா 3 முறை லீக் சுற்றோடு திரும்பின.
ஓமன், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், குவைத் அணிகள் ஒரு முறை கூட பிரதான சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
பாகிஸ்தான் அணியானது கடந்த 10ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கோப்பை தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு வெற்றி பெறவில்லை. கடந்த ஒரு வருடமாகவே பாகிஸ்தான்அணி இன்டர்நேஷனல் கிரிக்கெட்டில் சிறப்பாக தனது சாதனைகளை பதிவு செய்து வருகிறது. பாக். அணியைப்பொறுத்தவரை இந்த முறை பாஸ்ட் பவுலர் ஷாகீன் அப்ரிடி இல்லாதது அந்த அணிக்கு இழப்பாகும். முகமது வாசிமும் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். கேப்டன் பாபர் ஆசம், பகர்ஜமானை, முகமது ரிஸ்வான் ஆகியோரை மட்டுமே பாக் அணி நம்பி களம் இறங்க தயாராக உள்ளது.
இலங்கை அணியைப் பொறுத்தவரை பயிற்சியாளர் சில்வர் உட் தலைமையில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் ஷனாகா, குணதிலகா, நிசாங்கா, அசலங்கா, பானுகா, ஹசரங்கா, என திறமையான வீரர்கள் இருந்தாலும் சர்வதேச அணிகளான பாக், மற்றும்இந்தியாவை இலங்கை எதிர்கொள்ளும்போது சற்று திணற வேண்டியிருக்கலாம்.
வங்க தேச அணியைப் பொறுத்தவரை கடந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் அணியானது திணறி வருவதால் இத்தொடரை எப்படி சந்திக்க போகிறது என்பதை விரைவில் பார்க்க போகிறோம். சாகிப் அல்ஹசன் தலைமையில்மீண்டு வர முயற்சியினை வங்க தேச அணி மேற்கொண்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் அணியானது பாக்.அணிக்குஇணையாக திறமையான வீரர்களை கொண்டு சர்வதேச கிரி்க்கெட்டில் நன்கு விளையாடி வருகிறது. முகமது நபி கேப்டன். சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முயற்சிக்கலாம். ஸ்பின் பவுலர் ரஷித் கான் தன் பந்து வீச்சு திறமையை காட் முயற்சிப்பார். இன்று நடக்கு முதல்போட்டியில் ஆப்கானிஸ்தான் (பி.-பிரிவு) இலங்கையோடு மோதுகிறது. ஹாங்காங் அணியானது நான்காவது முறையாக ஆசிய கோப்பைட தொடரில் விளையாட உள்ளது.